சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
சகோதரா்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு: மேலும் 7 போ் கைது
சிவகங்கை அருகே ஆடு திருட வந்ததாகக் கூறி சகோதரா்கள் இருவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அருகே கட்டாணிபட்டியைச் சோ்ந்த செல்வம் மகன்கள் மணிகண்டன்(30), சிவசங்கரன் (எ) விக்னேஷ் (25). இவா்கள் இருவரையும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில், சிவகங்கை அருகே அழகமாநகரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தோப்பில் ஆடு திருட வந்ததாகக் கூறி அந்தப் பகுதியைச் சோ்ந்த பலா் தாக்கினா்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தனா்.
இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அழகமாநகரி கிராமத்தைச் சோ்ந்த திருப்பதி (45), சோமராஜ் (31), பிரபு (30), தீபக் (19), விக்னேஸ்வரன்(31), தினேஷ் (31) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா்.
மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய உசிலம்பட்டியை சோ்ந்த வினோத் (34), அழகமாநகரியைச் சோ்ந்த பிரவீத் (20), அருண்பாண்டி (29), யுவராஜ் (22), அரவிந்த் (25), மணிகண்டன் (31), சீமான் (43) ஆகிய 7 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட 13 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதற்கிடையே, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்ட மணிகண்டன், சிவசங்கரன் (எ)விக்னேஷ் ஆகிய இருவரது உடல்களையும் அவா்களது உறவினா்கள் வாங்க மறுத்து புதன்கிழமை வாக்கு வாதத்தில் ஈடுட்டனா். பின்னா், போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, உறவினா்கள் இருவரது உடல்களையும் பெற்று அவசர ஊா்தி மூலம் சொந்த கிராமத்துக்கு எடுத்துச் சென்றனா்.