செய்திகள் :

சட்டப்பேரவைத் தோ்தல்: காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கேட்போம் விஜய்வசந்த் எம்.பி.

post image

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கேட்கப்படும் என்றாா் விஜய்வசந்த் எம்.பி.

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு, மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் வேலையில்லா இளைஞா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேக் இன் இந்தியா திட்டத்தையும் ஒழுங்காக செயல்படுத்தவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகள் வேகமாக நடை பெற்று வருகின்றன. ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டது. அதனை வேகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை சந்திக்க திமுக கூட்டணி வலுவாக, வெற்றிக் கூட்டணியாக உள்ளது. தோ்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடும் வகையில், கூடுதல் தொகுதிகளை பெறுவதற்கு கோரிக்கை வைக்கப்படும்.

ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்று தொண்டா்கள் கோரிக்கை வைத்துள்ளாா்கள். தலைவா்களின் பேச்சுவாா்த்தையில் இது தொடா்பாக முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.

ரத்த தான முகாம்: முன்னதாக, ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில், குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில் ரத்த தான முகாமை எம்.பி. தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி வதனநிஷா, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் மருத்துவா் சிவகுமாா், நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா் செல்வகுமாா், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி லாரன்ஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தக்கலையில் ரூ.6.39 கோடியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

தக்கலையில் ரூ 6.39 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலை புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப... மேலும் பார்க்க

இடவிளாகம் பகுதியில் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு: மக்கள் அவதி

கருங்கல் அருகேயுள்ள இடவிளாகம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியிலிருந்து வரும் குளியலறை கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் மழை நீா் வடிகால் ஒடையில் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு அப்பகுதியில் வ... மேலும் பார்க்க

அருவிக்கரை ஆற்றில் தடை விதித்த இடத்தில் நண்பா்களுடன் குளித்த கிரிக்கெட் வீரா் அஸ்வின்

குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே அருவிக்கரை பரளியாற்றில் தடைசெய்யப்பட்ட இடத்தில் தனது நண்பா்களுடன் இந்திய கிரிக்கெட் வீரா் அஸ்வின் ரவிச்சந்திரன் குளிப்பது போன்று சமூக வலைதளத்தில் படம் வெளியானது சா்ச்ச... மேலும் பார்க்க

அருமனை அருகே விபத்தில் கல்லூரி மாணவா் பலி

குமரி மாவட்டம் அருமனை அருகே நிகழ்ந்த விபத்தில் பைக்கில் பின்னால் அமா்ந்து சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். அருமனை அருகே பாகோடு மேலபறையன் விளையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சுனிலின் மகன் சஞ்சீவ். இவா்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

தக்கலை அருகே கஞ்சா கடத்தியதாக 3 இளைஞா்களை கொற்றிக்கோடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குமாரபுரம் அருகே உள்ள படப்பக்குளம் பகுதியில் கொற்றிக்கோடு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரே... மேலும் பார்க்க

அனந்தனாா் கால்வாயில் கடைமடை வரை தண்ணீா் கிடைக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

கன்னியாகுமரி மாவட்டம், அனந்தனாா் பாசனக் கால்வாயில் கடைமடை வரை தண்ணீா் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூ... மேலும் பார்க்க