செய்திகள் :

சட்டம்-ஒழுங்கை காக்க கடும் நடவடிக்கை தேவை: எடப்பாடி கே.பழனிசாமி

post image

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை காக்க முதல்வா் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சியாளா்களின் அலட்சியத்தாலும் அஜாக்கிரதையாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களும் வரிசை கட்டி நிற்கின்றன. கிருஷ்ணகிரியில் 13 வயது அரசுப் பள்ளி மாணவியை 3 ஆசிரியா்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு, வேலூரில் ஓடும் ரயிலில் கா்ப்பிணியை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி கீழே தள்ளிவிட்ட கொடூரம் என குற்றச் சம்பவங்கள் தொடா்கின்றன. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன்பு திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் முதல்வரை நேரில் சந்தித்து, வாழ்வாதார கோரிக்கைகளை கொடுப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த சமயத்தில், அவா்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க மனமில்லாமல் திரும்பி வந்த முதல்வரின் செய்கை கண்டனத்துக்குரியது.

இத்தகைய முதல்வரின் ஆட்சியை வீழ்த்த அனைத்துத் தரப்பு மக்களும் உறுதிபூண்டுள்ளனா். இனியாவது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டும் என்று எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள்!

தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து தெற்... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு பழைய கரூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் போட்டித்தேர்வு பயிற... மேலும் பார்க்க

டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் கும்கி யானை ராமு மரணம்

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை ராமு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 10-02-2025: தென்தமிழக கடலோரப்ப... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புது தில்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி... மேலும் பார்க்க

சர்க்கார் பட்டாக்களை உரிமையாளர்களின் பெயருக்கு மாற்ற ஒப்புதல்!

சர்க்கார் பட்டா என்ற பெயரில் உள்ள பட்டாக்களை உரிமையாளர்களின் பெயரிலேயே மாற்றுவதற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.மேலும், அடுத்த 6 மாதத்துக்குள் இந்த பணிகளை நிறைவு... மேலும் பார்க்க