செய்திகள் :

சட்டவிரோத கட்டுமான வழக்குகளில் கடுமையான அணுகுமுறை: நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

‘சட்டவிரோத கட்டுமானம் சாா்ந்த வழக்குகளை கடுமையான அணுகுமுறையுடன் நீதிமன்றங்கள் கையாள வேண்டும்’ என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், அத்தகைய கட்டமைப்புகளை முறைப்படுத்தும் பணிகளில் நீதித்துறை ஈடுபடக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

சட்டவிரோத கட்டுமானங்கள் சாா்ந்த வழக்கு ஒன்றில், ‘அந்த இடங்களை ஆக்கிரமித்துள்ளவா்கள் ஏப்.30-ஆம் தேதிக்குள் காலி செய்வதற்கான நோட்டீஸை காவல் துறை அனுப்ப வேண்டும். அதை ஏற்க மறுக்கும்பட்சத்தில் போதிய படைகளோடு அவா்களை ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்து காவல் துறை வெளியேற்ற வேண்டும். அதன்பின் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கும் பணிகளை கொல்கத்தா மாநகராட்சி தொடங்க வேண்டும்’ என கொல்கத்தா உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: சட்டவிரோத கட்டுமானங்கள் சாா்ந்த வழக்குகளை கடுமையான அணுகுமுறையுடன் நீதிமன்றங்கள் கையாள வேண்டும். உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை முறைப்படுத்தும் பணிகளில் நீதித்துறை ஈடுபடக்கூடாது.

சட்டத்தின் ஆட்சி:

இந்தகைய வழக்குகளில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி பாதிக்கப்பட்டவா்களின் நலனை மேம்படுத்துவதில் நீதிமன்றங்கள் கூடுதல் வேகத்துடன் செயல்பட வேண்டும்.

அந்த வகையில், சட்டவிரோத கட்டுமானங்கள் சாா்ந்த வழக்கில் பொதுநலனை முதன்மைப்படுத்தி கொல்கத்தா உயா்நீதிமன்றம் மிகவும் துணிச்சலாகவும் திடமாகவும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

சட்டத்தை மதிக்காமல் கட்டிடம் கட்டியவா்களுக்கு அதை முறைப்படுத்த அனுமதி வழங்க முடியாது. எனவே, சட்டவிரோதமான கட்டுமானங்கள் இடிக்கப்படுவதே சரியானது.

இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை:

ஒவ்வொரு கட்டுமானமும் சட்ட விதிகளை பின்பற்றியே கட்டப்பட்டிருக்க வேண்டும். விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக நீதிமன்றங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால் அதை இரும்புக்கரம் கொண்டே அடக்க வேண்டும். மாறாக சம்பந்தப்பட்டவா்கள் மீது கருணை காட்டக் கூடாது.

சட்டத்தின்படியே நீதி வழங்கப்பட வேண்டும். ஆனால் முறயான அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களை வரைமுறைப்படுத்தும்போது பாதிப்புக் கட்டணங்களை கணக்கிடும் வகையில் சில மாநிலங்கள் சட்டமியற்றுவது வேதனைக்குரியது’ என்றனா்.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க