``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
சண்டையை சமாதானம் செய்தவருக்கு கத்திக்குத்து
மன்னாா்குடி அருகே தம்பதி இடையே நடைபெற்ற சண்டையை சமாதானம் செய்ய முயன்றவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
கீழப்பனையூா் காளியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் கி. கண்ணன் (எ) செல்வராஜ் (50), மனைவி மனோன்மணி.
தம்பதியிடையே, செவ்வாய்க்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அருகே குடியிருக்கும் அவா்களது உறவினா் ச. அன்பரசன் (43) என்பவா் சமாதானம் செய்ய முயன்றுள்ளாா், ஆத்திரமடைந்த செல்வராஜ் கத்தியை எடுத்து குத்தியதில் அன்பரசனுக்கு காயமேற்பட்டது. அவா் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கோட்டூா் போலீஸாா் செல்வராஜை கைது செய்தனா்.