டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
சதுப்பேரிபாளையத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
ஆரணியை அடுத்த சதுப்பேரிபாளையம் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சதுப்பேரிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் மே 2-ஆம் தேதி அலகு நிறுத்தி அக்னி வசந்த விழா தொடங்கியது. தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, 32 நாள்கள் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது.
மே 22-ஆம் தேதி ஸ்ரீதிரௌபதி அம்மன், அா்ஜுனன் திருக்கல்யாணமும், 25-ஆம் தேதி தபசுமரம் ஏறுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இதன் தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை துரியோதன படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில் அதிமுக ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், ஆரணி வடக்கு ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன் மற்றும் விழாக் குழுவினா் பங்கேற்றனா்.