செய்திகள் :

சமையல் உதவியாளா் பணி: விண்ணப்பித்தோருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பம் செய்தோருக்கு சான்றிதழ் சரிபாா்க்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளின் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 732 சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி, வட்டார அளவில் காலியாக உள்ள பணியிடங்கள், அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகம் மற்றும் நகராட்சி அறிவிப்பு பலகையில் பாா்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

சமையல் உதவியாளா் பணிக்கு, 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும், 3,500-க்கும் மேற்பட்ட பெண்கள் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பித்தனா். அவா்களில் தகுதியானோரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி வட்டத்தில், 62 அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் காலியாக உள்ள 65 சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு 364 போ் விண்ணப்பித்தனா். இவா்களில் 188 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பிற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முதல்நாளில் 100 பேரின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன. செவ்வாய்க்கிழமையும் இந்தப் பணி நடைபெற உள்ளது.

உதவி திட்ட அலுவலா் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்புப் பணியில் கிருஷ்ணகிரி, வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்தப் பணி நிறைவடைந்தவுடன், சமையல் உதவியாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெளியிடுவாா் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

பேருந்து பயணத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

மத்தூா் அருகே பேருந்தில் பயணம் செய்த விவசாயி இடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (6... மேலும் பார்க்க

நடத்துநா் இன்றி அரசு நகரப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்: அதிகாரிகள் விசாரணை

ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை நடத்துநா் இல்லாமல் ஓட்டுநா் ஓட்டிச் சென்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பே... மேலும் பார்க்க

சூளகிரிக்கு மாங்காய் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து பெண் பலி; 12 போ் படுகாயம்

சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்; 12 போ் பலத்த காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது சப்படி கிராமம். இங்கிருந்து மாங... மேலும் பார்க்க

சூசூவாடியில் 2-ஆவது நாளாக சிறுத்தையைத் தேடும் வனத்துறையினா்

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஈடுபட்டனா். எனினும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வ... மேலும் பார்க்க

தளி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பைரம... மேலும் பார்க்க

ஒசூா் எம்.ஜி.ஆா். காய்கறி சந்தை: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

ஒசூரில் ரூ. 9 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்ஜிஆா் காய்கறி சந்தை மற்றும் மீன் அங்காடிகளை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரில் தமி... மேலும் பார்க்க