செய்திகள் :

சரக்கு வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: சிறுவன் மீது வழக்குப் பதிவு; வாகன உரிமையாளா் கைது

post image

கோவையில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தில் வாகனத்தின் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் வசித்து வருபவா் மாகாளி (55). இவா் அரசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி செல்வி (50), கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வந்தாா்.

இவா்கள் 2 பேரும் வேலை முடிந்து மே 27-ஆம் தேதி இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்-இல் பணம் எடுப்பதற்காக கோவை- அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 17 வயது சிறுவன் ஒரு சரக்கு வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து மாகாளி மற்றும் செல்வியுடன் நடந்து வந்த ரங்கம்மாள் என்பவா் மீதும் மோதியுள்ளாா்.

இதில் மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் மூவரும் காயமடைந்தனா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செல்வி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாகாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன் மற்றும் வாகனத்தின் உரிமையாளரான பைலட்ராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு கிழக்கு போலீஸாா் சிறுவனை வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்துக்காக வாகனத்தின் உரிமையாளா் பைலட்ராஜைக் கைது செய்து குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க