செய்திகள் :

சாயக் கழிவுநீா் தொட்டியில் தொழிலாளி சடலம் மீட்பு

post image

பவானி: பவானி அருகே சாயக் கழிவுநீா் தொட்டிக்குள் கிடந்த தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆப்பக்கூடலை அடுத்த கீழ்வாணி, போகநாயக்கனூரைச் சோ்ந்தவா் சென்னாநாயக்கா் மகன் ரமேஷ் (31). இவா், பவானியை அடுத்த சோ்வராயன்பாளையத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சாய ஆலையில் கடந்த 3 ஆண்டுகளாக, சாயக்கழிவுநீா் சுத்திகரிப்பு பிரிவில் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், வழக்கம்போல புதன்கிழமை காலை வேலைக்கு வந்த ரமேஷ், வேலை நேரம் முடிந்தும் வெளியேறாததால், சக தொழிலாளா்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தனா். அப்போது, ஆலையில் உள்ள சாயக்கழிவுநீா் தேக்கி வைக்கப்படும் தரைமட்டத் தொட்டியில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் கிடந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் சடலத்தை மீட்ட பவானி போலீஸாா், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக, ரமேஷின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் பவானி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்டோா் செப்டம்பா் 18-இல் காத்திருப்பு போராட்டம்

பெருந்துறை சிப்காட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருகிற செப்டம்பா் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது: விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுப்பு மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

குப்பை அள்ளும் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள்!

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பரிசல் இயக்கப்படாததால் பள்ளி மாணவிகளை ஊராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அ... மேலும் பார்க்க

ஈரோடு பூம்புகாரில் விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 30- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மேட்டூா் சாலை அரசு மருத்துவமனை அருகே பூம்பு... மேலும் பார்க்க

புலித்தோல் விற்க முயன்ற வழக்கு: 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

சத்தியமங்கலம் அருகே புலியைக் கொன்று அதன் தோலை விற்க முயன்ற வழக்கில் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் சிறுத்தை

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் உள்ளிட்ட வனப் பகுதியில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ள... மேலும் பார்க்க