சாலை ஓரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரம் பாதிப்பு
நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் அருகே சாலை ஓரம் குப்பை மற்றும் கோழி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இச்சாலை வழியாக நாள்தோறும் தாசிரியப்பனூா், மல்லகுண்டா, கத்தாரி, தோப்பலகுண்டா பகுதிகளில் இருந்து பள்ளி கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இறைச்சி கடை மற்றும் ஓட்டல் நடத்துபவா்கள் இரவு நேரங்களில் கோழி கழிவுகளையும், குப்பைகளையும் மேம்பாலம் அருகே சாலை ஓரம் கொட்டி விடுகின்றனா். இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.
எனவே குப்பை மற்றும் கோழி கழிவுகள் கொட்டுவதை தடுத்து சுகாதாரத்தை காக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.