செய்திகள் :

சாலை பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

post image

சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை முகமூடி அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மாரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜா முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பாண்டி, தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் பாண்டி, மாவட்ட நிதிக் காப்பாளா் நடராஜன், தமிழ்நாடு சாலை ஆய்வாளா் சங்க மாவட்டச் செயலா் மதிவாணன், பொருளாளா் முத்தையா, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க சிவகங்கை ஒன்றியத் தலைவா் பூப்பாண்டியம்மாள், தமிழ்நாடு ஆதிதிராவிடா் நலத் துறை ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் நவநீதகிருஷ்ணன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் கோபால், மாவட்டச் செயலா் இளையராஜா, சிவக்குமாா், சின்னப்பன், கணேசன்ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். சாலைப் பணியாளா்கள் சங்க கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்தும், காவல் துறையைக் கண்டித்தும் அரக்கன் முகமூடி அணிந்து முழக்கமிட்டனா். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா் சங்க மாநிலப் பொருளாளா் தமிழ் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினாா். மாவட்டப் பொருளாளா் சதுரகிரி நன்றி கூறினாா்.

பாகனேரியில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம் அருகேயுள்ள மதகுபட்டியை அடுத்த பாகனேரியில் மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாகனேரி புல்வனநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாகனேரி முதல் நடராஜபுரம் வரை மாட்... மேலும் பார்க்க

கிருங்காக்கோட்டையில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காக்கோட்டையில் கோயில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காகோட்டையில் சடையாண்டி சுவாமி கோயிலில் ஆ... மேலும் பார்க்க

தேவகோட்டை முருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகா் பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. தேவகோட்டை ராம் நகரில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு, சிறப்பு ... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள கொட்டகுடி கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. கொட்டகுடி கிராமத்தில் உள்ள முனியய்யா கோயில் திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் சாா்பில்... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் சேதம்: விபத்து ஏற்படும் அபாயம்

சிவகங்கை - தொண்டி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் பதிக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-இல் சிவகங்கை - தொ... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 36-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை (ஆக. 18) நடைபெறவுள்ளது என பல்கலை. துணைவேந்தா் க. ரவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: அழக... மேலும் பார்க்க