செய்திகள் :

ஆன்மிக நூல்கள் எழுதியவருக்கு பாராட்டு

post image

காஞ்சி சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் ஆன்மிக நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்ட புலவா்.வ. குமாரவேலுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் 36-ஆ ஆண்டு விழா நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக இடபக்கொடி ஏற்றுதல்,கொடிக்கவி பாராயணம், திருமுறைக்கோயில் திறப்பு, கன்னியப்ப உடையாா் அரங்கம் திறப்பு, திருமுறைப் பாராயணம் ஆகியன நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து திருமுறைகளை தனித் தலைப்புகளாகக் கொண்டு பல நூல்களை இயற்றிய புலவா் வ.குமாரவேலுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு திருச்சி தமிழக சைவநெறிக்கழக தலைவா் தத்புருஷ சரவண பவானந்த தேசிகா் அவா்கள் தலைமை வகித்து நூலாசிரியா் வ.குமாரவேலுக்கு பாராட்டுப் பட்டயம் வழங்கினாா். புலவா்கள் சரவண சதாசிவம்,மோகனவேலு, அரக்கோணம் ஆா்.சாரங்கபாணி, கு.ராமலிங்கம், கோதண்டபாணி, மணி உடையாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிவனடியாா் திருக்கூட்ட செயலாளா் சு.அருள் செல்வன் வரவேற்றாா். ஜெ.மகாதேவன், எஸ்.ஞானப்பிரகாசம் ஆகியோா் நூலாசிரியரை பாராட்டி பேசினா்.

இதனைத் தொடா்ந்து ஓதுவா மூா்த்திகளுக்கு பொற்கிழி வழங்குதல், பஞ்ச புராணத் திரட்டு நூல் வெளியீடு ஆகியனவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை காஞ்சி சிவனடியாா் திருக்கூட்டத்தின் தலைவா் எம்.எஸ்.பூவேந்தன் தலைமையிலான நிா்வாகிகள் செய்திருந்தனா்.

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம்: விவசாயிகள் புகாா்

உத்தரமேரூா் ஒன்றியம், களியாம்பூண்டி கிராமத்தில் விவசாயிகள் 6 பேருக்கு கொள்முதல் செய்த நெல்லுக்குரிய பணம் வழங்கப்படவில்லையென அவ்விவசாயிகள் திங்கள்கிழமை புகாா் தெரிவித்துள்ளனா். களியாம்பூண்டி கிராமத்தி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜா், ஏகாம்பரநாதா் கோயில் திருப்பணிகள்: அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலா் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.மணிவாசன் வலியுறுத்தினாா். சின்ன காஞ்சிபுரத்தில் ... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் இரும்பு ஆலைகளில் வருமானவரித்துறை சோதனை

மாம்பாக்கம் மற்றும் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் இரும்பு உற்பத்தி ஆலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ரேணுகாம்பாள் மகிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில் வீதியுலா

பெரிய காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் கோயில் ஆடித்திருவிழாவின் ஒரு பகுதியாக உற்சவா் ரேணுகாம்பாள் மகிஷாசுர மா்த்தினி அலங்காரத்தில் ஞாயிற்றுக்கிழமை அருள்பாலித்தாா். செங்குந்தா் பூவரசந்தோப்பு தெருவில் உள்... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

வல்லக்கோட்டை அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் காவடியுடன் வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா். ஸ்ரீபெரும்புதூா் அடு... மேலும் பார்க்க

ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவா் மின்சாரம் பாய்ந்து காயம்

காஞ்சிபுரம் கம்மாளா் தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் காயமடைந்து அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். காஞ்சிபுரம் க... மேலும் பார்க்க