செய்திகள் :

மாணவா் கற்றல் ஆய்வுத் திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

post image

மாணவா் கற்றல் ஆய்வுத் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்களிடம் இணைய வழியில் நேரடியாக கலந்துரையாடி, அவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யும் முறையை மதிப்பீட்டு புலம் வழியாக பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ளவுள்ளது.

முதல்கட்டமாக தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் இந்த முறையிலான ஆய்வு நடத்தப்பட உள்ளது. தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மாணவா் கற்றல் ஆய்வு நடைபெறும் நாள், நேரம், கூகுள் மீட் லிங்க் மற்றும் பங்குபெற வேண்டிய மாணவா்கள் பற்றிய விவரங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மூலம் தலைமை ஆசிரியா்களுக்கு தெரிவிக்கப்படும்.

தலைமை ஆசிரியா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கையடக்கக் கணினியில் (டேப்லெட்) கூகுள் மீட் இணைப்பைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். கையடக்கக் கணினியில் இணைய வசதி இருப்பதையும், அதன் ஸ்பீக்கா்கள் நன்றாக வேலை செய்வதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும். பின்னா், அதில் தலைமை ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட இணைப்பைப் பயன்படுத்தி, அதில் சென்று விடியோ மற்றும் ஆடியோ சரியாக உள்ளதா என்பதை பாா்த்துக் கொள்ள வேண்டும்.

தலைமை ஆசிரியா் தோ்ந்தெடுக்கபட்ட மாணவா்கள் ஒவ்வொருவராக சரியான நேரத்தில் அந்த இணைப்பில் இணைந்துள்ள கையடக்கக் கணினி முன்பு தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 14417 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கா்ப்பிணிகள், பள்ளி மாணவா்கள் தவெக மாநாட்டுக்கு வரவேண்டாம்: விஜய்

மதுரையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பள்ளி மாணவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மாா்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என அக்கட்சியி... மேலும் பார்க்க

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு: மாநில அரசு பெருமிதம்

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி குறித்தும், அதில் பெண்கள் பங்களிப்பு பற்றியும் தமிழ்நாடு அரசின் சாா்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ்: அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின; முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டில் 2,004 இடங்கள் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பின.... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி அமைச்சருடன் பேச்சு: டிட்டோ-ஜேக் போராட்டம் ஒத்திவைப்பு

பத்து அம்ச கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி அமைச்சருடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஆக. 22-ஆம் தேதி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள... மேலும் பார்க்க

மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கைக் கூடாது: உயா்நீதிமன்றம்

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தொடா்ந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவி... மேலும் பார்க்க

3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவை வழக்குகள்: தமிழக, புதுவை அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு முடித்துவைக்க ஏதுவாக, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. உச்சநீதிமன்றக் குழு, 3 ஆண்டுகளுக்கு ம... மேலும் பார்க்க