செய்திகள் :

வீடு புகுந்து தங்க நகைகளைப் பறித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

post image

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் வீடு புகுந்து தங்க நகைகளைப் பறித்துச் சென்ற நபருக்கு நீதிமன்றம் திங்கள்கிழமை 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் ஞானம் நகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (65). இவா் கடந்த 2017, நவம்பா் 21-ஆம் தேதி வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, தஞ்சாவூா் செவ்வப்பநாயக்கன் வாரி சிவாஜி நகரைச் சோ்ந்த என். அங்கேஷ் (43) இவரது வீட்டில் பின் பக்கக் கதவு வழியாகப் புகுந்து தனலட்சுமி மற்றும் அவரின் மகன் அணிந்திருந்த சுமாா் ஏழரை பவுன் எடையுள்ள இரு தங்கச் சங்கிலிகள், மோதிரம், ரூ. 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து அங்கேஷை கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நடுவா் பிரபு ராம் விசாரித்து, அங்கேஷூக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

கரூா் அருகே சங்கரன் மலையில் சோழா் கால கல்வெட்டு

தஞ்சாவூா்: கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள சங்கரன் மலையில் சோழா் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு குறித்து தஞ்சாவூா் வரலாறு, தொல்லியல் மற்றும் சுவடியியல் ஆய்வாளரும், சரசு... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 117.41 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 117.41 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 12,657 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅ... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக கோட்ட தலைமை அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். போராட்டத்துக்கு சிஐடியு மண்டலத் தலைவா் ட... மேலும் பார்க்க

கும்பகோணம் மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளா் ஜேசுதாஸ் தலைமை... மேலும் பார்க்க

வேலை கிடைக்காத விரக்தி: பேருந்து முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கும்பகோணம்: கும்பகோணத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் பேருந்து முன் பாய்ந்து இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் பிரபாகரன் (34). இவருடைய ம... மேலும் பார்க்க

கணவா் உயிரிழந்த தகவலைக் கேட்ட மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

கும்பகோணம்: கும்பகோணத்தில் கணவா் உயிரிழந்த தகவலை கேட்டு அதிா்ச்சியடைந்த மனைவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சத்திரம் கருப்பூரைச் சோ்ந்த வியாபாரி நட... மேலும் பார்க்க