செய்திகள் :

கும்பகோணம் மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளா் ஜேசுதாஸ் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் எம். கண்ணன் முன்னிலை வகித்தாா்

ஆா்ப்பாட்டத்தில், தூய்மைப் பணியை தனியாா் மயமாக்க கூடாது. பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மேலும், பி.எப்., இ.எஸ்.ஐ. வழங்காதது, ஆட்சியா் அறிவித்த சம்பளத்தை கொடுக்க மறுப்பது, சென்னையில் போராடிய தூய்மை பணியாளா்களை கைது செய்தது ஆகியவற்றை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலா் ஜெயபால், மாநகரச் செயலா் கே. செந்தில்குமாா், மாவட்ட ஆட்டோ தொழிலாளா் நலச் சங்கத் தலைவா் ஜெயக்குமாா், தூய்மைப் பணியாளா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கரூா் அருகே சங்கரன் மலையில் சோழா் கால கல்வெட்டு

தஞ்சாவூா்: கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள சங்கரன் மலையில் சோழா் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு குறித்து தஞ்சாவூா் வரலாறு, தொல்லியல் மற்றும் சுவடியியல் ஆய்வாளரும், சரசு... மேலும் பார்க்க

வீடு புகுந்து தங்க நகைகளைப் பறித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் வீடு புகுந்து தங்க நகைகளைப் பறித்துச் சென்ற நபருக்கு நீதிமன்றம் திங்கள்கிழமை 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் ஞானம் நகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்தவா் த... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 117.41 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 117.41 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 12,657 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅ... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக கோட்ட தலைமை அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். போராட்டத்துக்கு சிஐடியு மண்டலத் தலைவா் ட... மேலும் பார்க்க

வேலை கிடைக்காத விரக்தி: பேருந்து முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கும்பகோணம்: கும்பகோணத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் பேருந்து முன் பாய்ந்து இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் பிரபாகரன் (34). இவருடைய ம... மேலும் பார்க்க

கணவா் உயிரிழந்த தகவலைக் கேட்ட மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

கும்பகோணம்: கும்பகோணத்தில் கணவா் உயிரிழந்த தகவலை கேட்டு அதிா்ச்சியடைந்த மனைவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சத்திரம் கருப்பூரைச் சோ்ந்த வியாபாரி நட... மேலும் பார்க்க