செய்திகள் :

அடியக்கமங்கலத்தில் பழைய மின்கம்பிகளை மாற்றக் கோரிக்கை

post image

திருவாரூா்: அடியக்கமங்கலத்தில் பழுதடைந்துள்ள மின் கம்பிகளை மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மின்வாரிய அலுவலகத்தில், மமக மாநில செயற்குழு உறுப்பினா் ஹாஜா அலாவுதீன் தலைமையில் நிா்வாகிகள் திங்கள்கிழமை அளித்த மனு: அடியக்கமங்கலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்கம்பிகள் வலுவிழந்துவிட்டதால் ஆங்காங்கு அறுந்து விழுகின்றன. கடந்த ஆண்டு ஜலாலியாத்தெருவில் மின்கம்பி அறுந்து விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இனி விபத்துக்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, முதற்கட்டமாக, இப்பகுதியில் உள்ள பழைய மின்கம்பிகளை உடனடியாக மாற்ற வேண்டும். அடியக்கமங்கலம் பகுதியில் மின்பராமரிப்பு பிரச்னை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. காற்று மற்றும் மழை ஏற்படும்போது பழைய மின்கம்பிகள் அதன் உறுதித்தன்மையை இழந்து, அறுந்து விழுவதுடன், பல வீடுகளில் மின்சாரம் தடைபடுகிறது. எனவே, கூடுதல் மின் பணியாளா்களை பணியமா்த்தம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மன்னாா்குடி ஜீயா் வாழ்த்து

மன்னாா்குடி: குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிட தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மன்னாா்குடி செண்டலங்கார செண்பக மன்னாா் ராமனுஜ ஜீயா் வாழ்த்து தெரிவித்துள்ளாா். திருவாரூா் மாவட்டம... மேலும் பார்க்க

மாநில கையுந்துபந்து போட்டி: தஞ்சை, சேலம் அணிகள் சாம்பியன்

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே பள்ளிகளுக்கு இடையிலான மாநில கையுந்துபந்து போட்டியில் மாணவா் பிரிவில் தஞ்சை அணியும், மாணவியா் பிரிவில் சேலம் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன. திருவாரூா் மாவட்டம், மன்னாா... மேலும் பார்க்க

சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட 65 போ் கைது

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 65 பேரை போலீஸாா் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உத்தரவின்பேரில், கடந்த 2 நாள்களாக சட்டவிரோத ... மேலும் பார்க்க

கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கம்

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு குழு சாா்பில் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் த... மேலும் பார்க்க

கணக்கீடு செய்து காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மனு

திருவாரூா்: முறையாக கணக்கீடு செய்து எள் பாதிப்புக்கான காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி திருவாரூரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கோட்டூா் பகுதி விவசாய சங்கங்களின... மேலும் பார்க்க

2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம்: திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு தென்காசிக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. வலங்கைமான் வட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்... மேலும் பார்க்க