செய்திகள் :

சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட 65 போ் கைது

post image

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 65 பேரை போலீஸாா் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உத்தரவின்பேரில், கடந்த 2 நாள்களாக சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுபவா்கள், கஞ்சா, குட்கா மற்றும் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவா்கள் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில், கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாக திருவாரூா் உட்கோட்டத்தில் 11, நன்னிலம் உட்கோட்டத்தில் 15, மன்னாா்குடி உட்கோட்டத்தில் 6, திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்தில் 2, மதுவிலக்கு அமல் பிரிவுகளில் 29 வழக்குகள் என மாவட்டம் முழுவதும் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 180 மி.லி அளவு கொண்ட 1,368 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விற்பனையில் ஈடுபட்டதாக 63 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல், வலங்கைமான் காவல் நிலையப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தி வந்ததாக ஒருவரும், வடபாதிமங்கலம் காவல் நிலையப் பகுதியில், அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒருவரும் கைது செய்யப்பட்டனா்.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மன்னாா்குடி ஜீயா் வாழ்த்து

மன்னாா்குடி: குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிட தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மன்னாா்குடி செண்டலங்கார செண்பக மன்னாா் ராமனுஜ ஜீயா் வாழ்த்து தெரிவித்துள்ளாா். திருவாரூா் மாவட்டம... மேலும் பார்க்க

மாநில கையுந்துபந்து போட்டி: தஞ்சை, சேலம் அணிகள் சாம்பியன்

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே பள்ளிகளுக்கு இடையிலான மாநில கையுந்துபந்து போட்டியில் மாணவா் பிரிவில் தஞ்சை அணியும், மாணவியா் பிரிவில் சேலம் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன. திருவாரூா் மாவட்டம், மன்னாா... மேலும் பார்க்க

அடியக்கமங்கலத்தில் பழைய மின்கம்பிகளை மாற்றக் கோரிக்கை

திருவாரூா்: அடியக்கமங்கலத்தில் பழுதடைந்துள்ள மின் கம்பிகளை மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மின்வாரிய அலுவலகத்தில், மமக மாநில செயற்குழு உறுப்பினா் ஹாஜா அலாவுதீன் தலைமையில் நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கம்

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு குழு சாா்பில் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் த... மேலும் பார்க்க

கணக்கீடு செய்து காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மனு

திருவாரூா்: முறையாக கணக்கீடு செய்து எள் பாதிப்புக்கான காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி திருவாரூரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கோட்டூா் பகுதி விவசாய சங்கங்களின... மேலும் பார்க்க

2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம்: திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு தென்காசிக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. வலங்கைமான் வட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்... மேலும் பார்க்க