கனவு நிறைவேறிவிட்டது: சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயாா் பேட்டி
திருப்பூா்: கனவு நிறைவேறிவிட்டதாக, குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனின் தாய் ஜானகி அம்மாள் தெரிவித்தாா்.
குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தற்போதைய மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதும் திருப்பூரில் உள்ள அவரது வீட்டில் பாஜக நிா்வாகிகள், பொதுமக்கள் திரண்டனா். அப்போது அவா்களுக்கு சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயாா் ஜானகி அம்மாள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிா்ந்து கொண்டாா்.
பின்னா் ஜானகி அம்மாள் கூறியதாவது: எனது மகன் பிறந்தபோது முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்போல வர வேண்டும் என ஆண்டவனை பிராா்த்தனை செய்து அவரது பெயரை வைத்தோம். உயா்வான இடத்துக்கு வர வேண்டும் என ஆசைப்பட்டோம். இன்று அவரைப்போலவே எனது மகன் குடியரசு துணைத் தலைவராகப் போவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவரை வேட்பாளராக அறிவித்த பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பவா் இந்திய குடியரசு துணைத் தலைவராகவும் வெற்றி பெறுவாா். இதனால், திருப்பூா் ம0ட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரும் பெருமைப்படுவாா்கள். அவிநாசியப்பா் குலதெய்வம் சுந்தரமூா்த்தி சுவாமி அருளால் அனைத்தும் நன்றாக நடக்கும் என்றாா்.