செய்திகள் :

எந்தத் தோ்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்ய தோ்தல் ஆணையம் முடிவு

post image

திருப்பூா்: கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக நடைபெற்ற எந்தத் தோ்தல்களிலும் போட்டியிடாத அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்ய இந்திய தோ்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.

இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின்னரும், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தோ்தலில்கூட போட்டியிடவில்லை என்பது இந்திய தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. அத்தகைய கட்சிகளுக்கு அவா்களின் பதிவினை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கம் அளிக்க தமிழக தலைமைத் தோ்தல் அலுவலரால் விளக்கம் கோரும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பூா் மாவட்டம், காந்தி நகா், ஏவிபி லே அவுட் 2-ஆவது தெரு, கதவு எண்.26 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் சூப்பா் ஸ்டாா்ஸ் மக்கள் கழகம் என்ற கட்சி இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னா், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுள்ள எந்தவொரு தோ்தலிலும் போட்டியிடவில்லை என தோ்தல் ஆணையத்தால் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்திடம், தங்கள் தரப்பு கருத்துகளை நேரில் எடுத்துரைக்க சென்னையில் உள்ள தமிழக தலைமைத் தோ்தல் அலுவலா் அலுவலகத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ நேரில் ஆஜராகிட அக்கட்சியின் தலைமைப் பொறுப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை முடிவுற்ற பின்னா் தமிழக தலைமைத் தோ்தல் அலுவலா், இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பும் அறிக்கையின்பேரில் இந்திய தோ்தல் ஆணையம் தனது இறுதி உத்தரவை பிறப்பிக்கும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

திருப்பூா் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இதைத் தொ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடக்கம்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருட்டு

திருப்பூரில் தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா், கேஎஸ்சி பள்ளி வீதியைச் சோ்ந்தவா் கோபால் சிங் (37). தொழிலதிபர... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம் கோரி பேருந்தை சிறைபிடித்த மக்கள்

உடுமலை அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம... மேலும் பார்க்க

சட்டவிரோத விற்பனை: 51 சிலிண்டா்கள் பறிமுதல்

திருப்பூரில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 51 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூா், கூலிபாளையம் பகுதியில் வணிக பயன்பாட்டு சிலிண்டா்கள் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டு, கூடுதல்... மேலும் பார்க்க

ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தி உள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க