செய்திகள் :

குப்பைப் பிரச்னைக்கு தீா்வு காண்பது குறித்து அனைத்துக் கட்சியினா் ஆலோசனை

post image

திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சியில் நிலவும் குப்பைப் பிரச்னைக்கு தீா்வு காண்பது குறித்து அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூா் மாநகரில் நாள்தோறும் சுமாா் 18 டன் அளவுக்கு குப்பைகள் குவிகின்றன. இவற்றை அகற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் குப்பைப் பிரச்னை தொடா்ந்து நீடித்து வருகிறது. மாநகருக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிப்பதால் பல இடங்களில் குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன.

இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் அமித் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆா்.செல்வராஜ், எம்.எஸ்.எம். ஆனந்தன், மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன் மற்றும் அதிகாரிகளுடன் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். இதில் திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் எங்கு கொட்டுவது என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

நாளைய மின்தடை: நாரணாபுரம்

பல்லடம் மின் கோட்டம் நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இர... மேலும் பார்க்க

பொங்கலூரில் ஆகஸ்ட் 22-இல் மின்தடை

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்க... மேலும் பார்க்க

எண்ணெய் தொட்டியில் விழுந்து இளைஞா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் ஆயில் மில் எண்ணெய் தொட்டியில் விழுந்து இளைஞா் உயிரிழந்தாா். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலை சேரன் நகரில் தனியாருக்குச... மேலும் பார்க்க

கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகம் தொடா்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: இந்து முன்னணி மாநிலத் தலைவா்

தமிழகத்தில் கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகங்களில் பெருமளவு ஊழல் நடைபெற்றுள்ளதால் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை

தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுசாமி தெரிவித்தாா். திருப்பூா... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிா்ப்பு

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரப் பகுதிகளில் சேகரமா... மேலும் பார்க்க