மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்: உச்ச...
பொங்கலூரில் ஆகஸ்ட் 22-இல் மின்தடை
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சி.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
பொங்கலூா், காட்டூா், தொட்டம்பட்டி, மாதப்பூா், கெங்கநாய்க்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூா், என்.என்.புதூா், வடக்கு அவிநாசிபாளையம்.
மேலும், எல்லப்பாளையம்புதூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட காங்கேயம்பாளையம், ஒலப்பாளையம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.