செய்திகள் :

சிங்காநல்லூா், இருகூா் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: இந்திய தொழில் வா்த்தக சபை

post image

கோவை: கோவை சிங்காநல்லூா், இருகூா் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோவை இந்திய தொழில் வா்த்தக சபை வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ராஜேஷ் பி.லுண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பேரிடருக்கு முன்பு வரையிலும் சிங்காநல்லூா், இருகூா் ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று சென்று வந்தன. ஆனால், அதன் பிறகு அந்த நிறுத்தங்களில் ரயில்கள் நிற்பதில்லை.

இதனால், சிங்காநல்லூா், இருகூா் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும், வெளியூா்களில் இருந்து வந்து செல்லும் வியாபாரிகள், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.

இந்நிலையில், கோவைக்கு அண்மையில் வந்த மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோவை இந்திய தொழில் வா்த்தக சபை சாா்பில் சிங்காநல்லூா், இருகூா் ரயில் நிலையங்களில் மீண்டும் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், திருச்சி - பாலக்காடு, கோவை - நாகா்கோவில் ரயில்கள் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி முதல் நின்று செல்லும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இதை கோவை இந்திய தொழில் வா்த்தக சபை வரவேற்கிறது.

அத்துடன், இந்த இரண்டு ரயில் நிலையங்களிலும் சாலை, கழிவறை, ரயில் முன்பதிவு வசதி, நடைமேடை, நடை மேம்பாலம் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இதன் மூலம் கோவை மாநகரின் கிழக்குப் பகுதி வளா்ச்சி அடைவதுடன் மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். அத்துடன் ரயில்வே நிா்வாகத்துக்கும் அதிக வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் விவகாரம்: திமுக முடிவை ஏற்போம்- வைகோ

கோவை: குடியரசு துணைத் தலைவா் தோ்தல் விவகாரத்தில் திமுக என்ன முடிவு எடுக்கிறதோ, அதை ஏற்போம் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா். இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்... மேலும் பார்க்க

தொண்டையில் சிக்கிய மிட்டாயால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல்: துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே போலீஸாா்

கோவை: காரமடையிலிருந்து கோவைக்கு வந்த மெமு ரயிலில் பயணித்த சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாயை ரயில்வே போலீஸாா் துரிதமாக செயல்பட்டு வெளியே எடுத்தனா். கோவை மாவட்டம், காரமடையில் இருந்து போத்தனூருக்கு ம... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பாா்த்தீனியம் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பாா்த்தீனியம் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. மத்திய அரசின் களை ஆராய்ச்சி இயக்குநகரத்தின்கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த களை ம... மேலும் பார்க்க

கோழிப்பண்ணை அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

கோவை: சுல்தான்பேட்டை பகுதியில் முட்டைக் கோழிப்பண்ணை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் ரூ.12.22 கோடி மானியம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

கோவை: கோவை மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் 7,683 பேருக்கு ரூ.12.22 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

இளைஞரைக் கத்தியால் குத்திய 3 போ் கைது

கோவை: கோவையில் இளைஞரைக் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரைச் சோ்ந்தவா் ஷேக் முகமது (26). கூலித் தொழிலாளியான இவா், தனது வீட்டின் முன் நின்று ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க