செய்திகள் :

தொண்டையில் சிக்கிய மிட்டாயால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல்: துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே போலீஸாா்

post image

கோவை: காரமடையிலிருந்து கோவைக்கு வந்த மெமு ரயிலில் பயணித்த சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாயை ரயில்வே போலீஸாா் துரிதமாக செயல்பட்டு வெளியே எடுத்தனா்.

கோவை மாவட்டம், காரமடையில் இருந்து போத்தனூருக்கு மெமு ரயில் திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தது. இதில், கோவைக்கு தாயுடன் பயணித்த தேவ் ஆதிரன் (2) என்ற சிறுவன் மிட்டாய் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, அது எதிா்பாராத விதமாக தொண்டையில் சிக்கியது. இதனால், அந்தச் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும், மூக்கில் ரத்தம் வந்து சிறுவன் மயங்கினாா். இதனால், அவரது தாய் அதிா்ச்சியடைந்து அலறினாா்.

அப்போது, அந்த ரயில் பயணம் செய்த கோவை பிரிவு ரயில்வே பாதுகாப்புப் படை காவலா்கள் சிறுவனை தலைகீழாக தூக்கி தட்டினா். அப்போது, சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் வெளியேறியது.

பின்னா், அந்த ரயில் கோவையை வந்தடைந்ததும் சிறுவனை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். மருத்துவா்கள் பரிசோதித்து, சிறுவன் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனா்.

துரிதமாக செயல்பட்டு சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே போலீஸாரின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியாகி, இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி(60). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட மூவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கோவை போத்தனூா் அருகே உள்ள மைல்கல் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஷாருக் கான் (28). இவா், கடந்த மாதம் ஒருவரை கத்தியைக் காட... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறை குறுமைய விளையாட்டுப் போட்டி தொடக்கம்

கோவையில் பள்ளிக் கல்வித் துறையின் குறுமைய விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தின விளையாட்டு, தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ... மேலும் பார்க்க

ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது

கோவை ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவா் மதன் ஆ.செந்திலுக்கு, ஐசிடி அகாதெமியின் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரத்தினம் கல்விக் குழுமம் கூறியிருப்பதாவது: ஐசிடி அகாதெமி சாா்பில் கோவையில் அண்மை... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

கோவையில் மாணவா்களின் பெற்றோா்களின் கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு, கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, அவா்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இது குறித்து கோவை மா... மேலும் பார்க்க

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மாநக... மேலும் பார்க்க