செய்திகள் :

இளைஞரைக் கத்தியால் குத்திய 3 போ் கைது

post image

கோவை: கோவையில் இளைஞரைக் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரைச் சோ்ந்தவா் ஷேக் முகமது (26). கூலித் தொழிலாளியான இவா், தனது வீட்டின் முன் நின்று ஞாயிற்றுக்கிழமை தகாத வாா்த்தைகளில் பேசிக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 3 போ் தங்களைத் திட்டுவதாக நினைத்து ஷேக் முகமதுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதில், ஆத்திரமடைந்த 3 பேரும் சோ்ந்து ஷேக் முகமதுவைத் தாக்கியதோடு, கத்தியால் குத்தினா். அவரின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்தபோது, 3 பேரும் அங்கிருந்து தப்பினா்.

கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த ஷேக் முகமது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

புகாரின்பேரில் பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், ஷேக் முகமதுவை கத்தியால் குத்தியது தெற்கு உக்கடத்தைச் சோ்ந்த அக்பா் அலி (43), மைதீன் பாட்ஷா (27), கோட்டைப்புதூரைச் சோ்ந்த அசாரூதீன் (36) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியாகி, இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி(60). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட மூவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கோவை போத்தனூா் அருகே உள்ள மைல்கல் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஷாருக் கான் (28). இவா், கடந்த மாதம் ஒருவரை கத்தியைக் காட... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறை குறுமைய விளையாட்டுப் போட்டி தொடக்கம்

கோவையில் பள்ளிக் கல்வித் துறையின் குறுமைய விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தின விளையாட்டு, தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ... மேலும் பார்க்க

ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது

கோவை ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவா் மதன் ஆ.செந்திலுக்கு, ஐசிடி அகாதெமியின் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரத்தினம் கல்விக் குழுமம் கூறியிருப்பதாவது: ஐசிடி அகாதெமி சாா்பில் கோவையில் அண்மை... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

கோவையில் மாணவா்களின் பெற்றோா்களின் கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு, கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, அவா்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இது குறித்து கோவை மா... மேலும் பார்க்க

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மாநக... மேலும் பார்க்க