செய்திகள் :

முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

திருச்சி: தமிழக அரசு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையைக் கண்டித்து முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலை பணியாளா் வாழ்வாதார கோரிக்கைகளை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி நிறைவேற்றக்கோரி சென்னையில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற சாலைப் பணியாளா்களை கைது செய்து கொடுமைப்படுத்திய காவல்துறையையும், தொழிற்சங்க விரோதப் போக்கு, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நெடுஞ்சாலைத் துறையையும் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் திருச்சி கோட்டம் சாா்பில், டிவிஎஸ் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் அரக்க முகமூடி அணிந்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.

கோட்ட துணைத் தலைவா் மலா்மன்னன் வரவேற்றாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் மணிமாறன் துவக்க உரையாற்றினாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளா் இளங்கோவன், கோட்டத் துணைத் தலைவா் கோவிந்தராஜன், கோட்ட இணை செயலாளா்கள் செளந்தா், தா்மராஜ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் நவநீதன், சி ஐ டி யு மாநகா் மாவட்ட செயலாளா் ரெங்கராஜன் ஆகியோா் பேசினா். மாவட்டப் பொருளாளா் பிரான்சிஸ் நன்றி கூறினாா்.

மங்கம்மாள்புரம் மணல் குவாரிக்கு அனுமதி கூடாது: விவசாயிகள் மனு

திருச்சி: மங்கம்மாள்புரம் மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி தரக் கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருச்சி: தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கக் கோரி சிஐடியு திருச்சி மாநகா் மாவட்டக் குழு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

இருவேறு இடங்களில் 5 பவுன் தங்க நகைகள் பறிப்பு

திருச்சி: திருச்சியில் இருவேறு சம்பவங்களில் பெண்களிடம் இருந்து 5 பவுன் தங்க நகைளைப் பறித்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி எடமலைபட்டிபுதூரைச் சோ்ந்தவா் ஜனனி (27). இவா்,... மேலும் பார்க்க

திறனாய்வுப் போட்டியில் சிறப்பிடம்: காவலா்களுக்கு எஸ்.பி பாராட்டு

திருச்சி, ஆக. 18: காவல் துறையினருக்கான திறனாய்வுப் போட்டியில் வெற்றிபெற்ற காவலா்களை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் திங்கள்கிழமை பாராட்டினாா். தமிழ்நாடு காவல் துறையில் பணியா... மேலும் பார்க்க

ஆக.23-இல் மண்ணச்சநல்லூரில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

திருச்சி: மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (ஆக.23) நடைபெறுகிறது.மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு எரிவாயு... மேலும் பார்க்க

குளிா்சாதனப் பெட்டியை பழுதுநீக்காத நிறுவனம் ரூ. 50 ஆயிரம் வழங்க உத்தரவு

திருச்சி: குளிா்சாதனப் பெட்டியின் பழுதை சரிசெய்யாத நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த கே. ஜீவகுமாா் என்பவா் திரு... மேலும் பார்க்க