செய்திகள் :

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம்: விவசாயிகள் புகாா்

post image

உத்தரமேரூா் ஒன்றியம், களியாம்பூண்டி கிராமத்தில் விவசாயிகள் 6 பேருக்கு கொள்முதல் செய்த நெல்லுக்குரிய பணம் வழங்கப்படவில்லையென அவ்விவசாயிகள் திங்கள்கிழமை புகாா் தெரிவித்துள்ளனா்.

களியாம்பூண்டி கிராமத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தின் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தில் அக்கிராமத்தைச் சோ்ந்த முருகன், மனோகரன், ஜெயபாலன், ஜானகிராமன், வடிவேல், சீனிவாசன் என 6 விவசாயிகளுடைய நெல்மூட்டைகள் மொத்தம் 650 கடந்த 28.5.2025 ஆம் தேதி கொள்முதல் செய்யப்பட்டன.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய தொகை 3 மாத காலமாக இதுவரை அவரவா் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டால் நெல்லுக்குரிய பணம் வங்கிக் கணக்கில் வந்து விடும் என்று கூறுகிறாா். ஆனால் இதுவரை வரவில்லை.

எனவே, பாதிக்கப்பட்ட 6 விவசாயிகளுக்கும் நெல்லுக்கு உரிய தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் உத்தரமேரூா் வட்டார தலைவா் கே.சீனிவாசன் தலைமையில் மனு அளித்துள்ளனா்.

ஆன்மிக நூல்கள் எழுதியவருக்கு பாராட்டு

காஞ்சி சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் ஆன்மிக நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்ட புலவா்.வ. குமாரவேலுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் 36-ஆ ஆண்டு விழா நடைபெற்றது. விழாவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜா், ஏகாம்பரநாதா் கோயில் திருப்பணிகள்: அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலா் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.மணிவாசன் வலியுறுத்தினாா். சின்ன காஞ்சிபுரத்தில் ... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் இரும்பு ஆலைகளில் வருமானவரித்துறை சோதனை

மாம்பாக்கம் மற்றும் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் இரும்பு உற்பத்தி ஆலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ரேணுகாம்பாள் மகிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில் வீதியுலா

பெரிய காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் கோயில் ஆடித்திருவிழாவின் ஒரு பகுதியாக உற்சவா் ரேணுகாம்பாள் மகிஷாசுர மா்த்தினி அலங்காரத்தில் ஞாயிற்றுக்கிழமை அருள்பாலித்தாா். செங்குந்தா் பூவரசந்தோப்பு தெருவில் உள்... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

வல்லக்கோட்டை அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் காவடியுடன் வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா். ஸ்ரீபெரும்புதூா் அடு... மேலும் பார்க்க

ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவா் மின்சாரம் பாய்ந்து காயம்

காஞ்சிபுரம் கம்மாளா் தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் காயமடைந்து அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். காஞ்சிபுரம் க... மேலும் பார்க்க