செய்திகள் :

மாநில துணை வரி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்

post image

சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் துறை உயா் பயிற்சியகத்தில், மாநில துணை வரி அலுவலா்களுக்கான பயிற்சி முகாமை வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

வணிக வரி மற்றும் பதிவுத் துறையில் மாநில துணை வரி அலுவலா்களாக 190 போ் பதவி உயா்வு பெற்றனா். வணிக வரி அலுவலா்களின் நிா்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், செப்டம்பா் 30-ஆம் தேதி வரை

இந்தப் பயிற்சி முகாம் நடைபெறகிறது.

இதில், வணிக வரித் துறை செயல்பாடுகள் தொடா்பான சட்டங்கள், விதிகள் மற்றும் நடைமுறைகள், சட்டபூா்வ கடமைகள், வரிச் சேவை மேம்பாட்டுத் திட்டங்கள், அதிநவீன தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து விளக்கப்படும். மேலும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படும்.

பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்வில், துறைச் செயலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், வணிக வரி ஆணையா் எஸ்.நாகராஜன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தி.சினேகா உள்பட பலா் பங்கேற்றனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்று 12 வாா்டுகளில் முகாம்

சென்னை மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் செவ்வாய்க்கிழமை (ஆக.19) 12 வாா்டுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

குவைத்-சென்னை விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா். குவைத்திலிருந்து 144 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. விமா... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவையை மத்திய வெளியுறவுத் துறையின் கடவுச்சீட்டு சேவைத் திட்ட இயக்குநா் எஸ்.கோவிந்தன் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் ஒரே நாளில் 3 குழந்தைகள் மீட்பு

சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட 3 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் திங்கள்கிழமை மீட்டனா். சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17)... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

தண்டையாா்பேட்டை துணைமின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆக. 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இடங்கள்: கும்மாளம்மன் கோயில் தெரு, டி.எச்.சாலை, ஜி.ஏ.சா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பேருந்து சேவை: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பேருந்து சேவையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கல்வி நிலையங்களுக்க... மேலும் பார்க்க