செய்திகள் :

கடந்த நிதியாண்டில் 2,600 கிலோ தங்கம் பறிமுதல்

post image

கடந்த நிதியாண்டில் பல்வேறு விசாரணை அமைப்புகளால் 2,600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

2023-24-ஆம் நிதியாண்டில் 6,599 கடத்தல் வழக்குகளில் 4,972 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதே இதுவரை ஓராண்டில் பறிமுதல் செய்யப்பட்ட அதிகபட்சமாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தங்க இறக்குமதி மற்றும் கடத்தலில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பங்கஜ் சௌதரி அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2022-23, 2021-22, 2020-21 ஆகிய நிதியாண்டுகளில் முறையே 4,343 கிலோ, 2,172 கிலோ, 1,944 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

2024-25-ஆம் நிதியாண்டில் பல்வேறு விசாரணை அமைப்புகளால் 2,600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2023-இல் ரூ.3.71 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2024-இல் ரூ.5.06 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.

அதிகபட்சமாக ஸ்விட்சா்லாந்தில் இருந்து ரூ.1.87 லட்சம் கோடி மதிப்பிலான தங்கமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ரூ.1.12 லட்சம் கோடி மதிப்பிலான தங்கமும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் சட்டப் பேரவைகளை கலைத்துப் பாருங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சவால்

தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க "இண்டி' கூட்டணிக் கட்சிகள் தயாரா என்று பாஜக சவால் விடுத்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் செயல்ப... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், ம... மேலும் பார்க்க

வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிக்கிறோம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

நமது நிருபர்வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிப்பதாக டாஸ்மாக் வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோட... மேலும் பார்க்க

குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா 2025’ என்ற பெயரிலா... மேலும் பார்க்க

ஜன் தன் கணக்குகளில் 23% செயலற்றவை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டமான பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில் 23 சதவீத கணக்குகள் தற்போது எந்த பரிவரிவா்த்தையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவைய... மேலும் பார்க்க