செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

post image

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் (51) கடந்த 2017ஆம் ஆண்டுவரை இருமுறை எம்எல்ஏவாக பணியாற்றியுள்ளார். சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக ஆகிய கட்சிகளில் இருந்த பகவான் சர்மா, தற்போது ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியில் இருந்து வருகிறார். இவர், 41 வயது பெண்ணுடன் நெருங்கிப் பழகிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவருக்கும் 8 வயது குழந்தையும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பெங்களூரில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரில், "வியாபார நிமித்தமாக பகவான் சர்மா ஆக. 14ஆம் தேதி பெங்களூர் வந்திருந்தார். என்னையும், என் மகனையும் பெங்களூருக்கு வருமாறு கூறியிருந்தார். அதன்பேரில் நாங்களும் பெங்களூர் வந்திருந்தோம். சித்ரதுர்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு எங்களை அழைத்துச் சென்றார். ஆக. 17ஆம் தேதி கெம்பே கெளடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் எங்களை தங்கவைத்தார். அப்போது எனது விருப்பத்துக்கு மாறாக, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றார். பாலியல் ரீதியான விருப்பத்துக்கு இணங்காவிட்டால், என்னைக் கொலை செய்துவிடுவதாக அவர் மிரட்டினார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பகவான் சர்மா மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸôர் தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் சட்டப் பேரவைகளை கலைத்துப் பாருங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சவால்

தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க "இண்டி' கூட்டணிக் கட்சிகள் தயாரா என்று பாஜக சவால் விடுத்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் செயல்ப... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், ம... மேலும் பார்க்க

வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிக்கிறோம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

நமது நிருபர்வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிப்பதாக டாஸ்மாக் வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோட... மேலும் பார்க்க

குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா 2025’ என்ற பெயரிலா... மேலும் பார்க்க

ஜன் தன் கணக்குகளில் 23% செயலற்றவை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டமான பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில் 23 சதவீத கணக்குகள் தற்போது எந்த பரிவரிவா்த்தையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவைய... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப் போட்ட பலத்தமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பித்தது

மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, தாணே, ராய்கட் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய ... மேலும் பார்க்க