செய்திகள் :

சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

post image

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்தார்.

மக்களவையில் சுபான்ஷு சுக்லாவின் வெற்றிகரமான விண்வெளிப் பயணம் தொடர்பான விவாதத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை காலை தொடங்கிவைத்தார். அப்போதே பிகாரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டன.

கடும் அமளிக்கிடையே அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில் "இந்திய விண்வெளி வீரர் ஒருவர் வரும் 2040-ஆம் ஆண்டு நிலவில் தரையிறங்குவார். வளர்ந்த பாரதம் என்ற கருத்துருவாக்கத்தை அவர் அதன்மூலம் நினைவுபடுத்துவார்' என்று தெரிவித்தார். எனினும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டதால் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதம் பாதியிலேயே நின்றுபோனது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த இந்தியாவின் முதல் விண்வெளி வீரரைப் பற்றி மக்களவையில் விவாதம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த விவாதம் நாட்டின் பெருமிதம் மற்றும் சாதனைகள் பற்றியதாகவும் எதிர்காலத்தில் தேசியப் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்டிருக்கும். எனினும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளை முடக்கிய விதம் துரதிருஷ்டவசமானது.

எதிர்க்கட்சிகள் நடந்துகொள்ளும் முறை மிகவும் அதிருப்தி அளிக்கிறது. 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் ராணுவ மற்றும் அறிவியல் சார்ந்த நலன்களுக்கு முக்கியமான விண்வெளி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விண்வெளித் துறையில் இந்தியா எட்டிவரும் உச்சமானது முன்னெப்போதும் நாம் கண்டிராததாகும்.

மக்களவையில் இது தொடர்பான விவாதம் தொடங்கியபோது எதிர்க்கட்சிகள் அதில் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான விமர்சனத்தையும், ஆலோசனைகளையும் முன்வைத்திருக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் சட்டப் பேரவைகளை கலைத்துப் பாருங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சவால்

தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க "இண்டி' கூட்டணிக் கட்சிகள் தயாரா என்று பாஜக சவால் விடுத்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் செயல்ப... மேலும் பார்க்க

வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிக்கிறோம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

நமது நிருபர்வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிப்பதாக டாஸ்மாக் வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோட... மேலும் பார்க்க

குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா 2025’ என்ற பெயரிலா... மேலும் பார்க்க

ஜன் தன் கணக்குகளில் 23% செயலற்றவை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டமான பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில் 23 சதவீத கணக்குகள் தற்போது எந்த பரிவரிவா்த்தையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவைய... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப் போட்ட பலத்தமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பித்தது

மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, தாணே, ராய்கட் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய ... மேலும் பார்க்க