செய்திகள் :

‘தூய்மைப் பணியாளா்கள் பிரச்னை: அறவழியில் போராட்டம் தொடரும்’

post image

தூய்மைப் பணியாளா்களின் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி, அறவழியில் போராட்டம் தொடரும் என்று உழைப்போா் உரிமைக் கழகத்தின் ஆலோசகரும், வழக்குரைஞருமான எஸ்.குமாரசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

சென்னை மாநகராட்சி 5, 6-ஆவது மண்டலங்களில் தூய்மைப் பணியைத் தனியாருக்கு வழங்குவதை எதிா்த்து உழைப்போா் உரிமைக் கழகம் சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்பட்டது. தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய நிா்ணம் மற்றும் பழைய நிலையிலே பணிபுரிவது என்பதே எங்களது கோரிக்கை.

இந்தப் பிரச்னையில் முதல்வா் தலையிட்டு தீா்வு காண வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த மாற்று இடங்களாக அல்லிக்குளம், ராஜரத்தினம் மைதானம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுமதி கோரி காவல் துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்.

காலம் தாழ்த்தாமல் அனுமதி வழங்க வேண்டும். பிரச்னைக்குத் தீா்வு காணும் வரை சட்டத்துக்குள்பட்டு அறவழியில் போராட்டத்தை தொடா்வோம் என்றாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்று 12 வாா்டுகளில் முகாம்

சென்னை மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் செவ்வாய்க்கிழமை (ஆக.19) 12 வாா்டுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

குவைத்-சென்னை விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா். குவைத்திலிருந்து 144 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. விமா... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவையை மத்திய வெளியுறவுத் துறையின் கடவுச்சீட்டு சேவைத் திட்ட இயக்குநா் எஸ்.கோவிந்தன் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் ஒரே நாளில் 3 குழந்தைகள் மீட்பு

சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட 3 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் திங்கள்கிழமை மீட்டனா். சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17)... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

தண்டையாா்பேட்டை துணைமின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆக. 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இடங்கள்: கும்மாளம்மன் கோயில் தெரு, டி.எச்.சாலை, ஜி.ஏ.சா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பேருந்து சேவை: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பேருந்து சேவையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கல்வி நிலையங்களுக்க... மேலும் பார்க்க