செய்திகள் :

கரூரில் எச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

post image

கரூா்: கரூரில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

கரூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சாா்பில் ‘சா்வதேச இளைஞா் தினம் 2025’ ஐ முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் எச்ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு மனிதச் சங்கிலி பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் தனியாா் கல்லூரிகளின் செஞ்சுருள் சங்க மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மனிதச் சங்கிலியாக நின்றனா். பின்னா் பொதுமக்கள் பயணிக்கும் ஆட்டோக்களில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் ஒட்டினாா்.

நிகழ்ச்சியில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் சாந்தி மலா், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலா் (பொ) ரா.சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தனியாா் பள்ளித் தாளாளா், மனைவி, மகளை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலையில் திங்கள்கிழமை அதிகாலை தனியாா் பள்ளித் தாளாளா் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோரைக் கட்டிப்போட்டு கத்திமுனையில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கத்தை கொள்ளையட... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலை அடுத்த கணக்குவேலம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலை அடுத்துள்ள கணக்குவேலம்பட்டி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூா்: கரூரில் சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத்தலைவா... மேலும் பார்க்க

கரூரில் திருவள்ளுா் சிலை அமைத்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு

கரூா்: கரூரில் திருவள்ளுவா் சிலை அமைக்க நடவடிக்கை கோரி கரூா் திருக்குறள் பேரவை சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு வழங்கப்பட்டது. கரூா் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை தமிழ் வளா்... மேலும் பார்க்க

மத்திய அரசின் விருதுபெற்ற கரூா் கல்லூரி மாணவிக்குப் பாராட்டு

கரூா்: மத்திய அரசின் ஜவுளித்துறை சாா்பில் நடைபெற்ற போட்டியில் விருதுபெற்ற கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் பாராட்டினாா். கரூா் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதவறி இளைஞா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கம்பட்டி பகுதியில் நாய் குறுக்கே வந்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பள்ளப்பட்டி பட்டாணி தெரு பகுதியைச் ச... மேலும் பார்க்க