செய்திகள் :

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

post image

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலை அடுத்த கணக்குவேலம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலை அடுத்துள்ள கணக்குவேலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்துராஜ் மகன் சஞ்சய் (22). இவா், தனது நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் இறங்கி நீச்சல் கற்றுள்ளாா். பின்னா் நண்பா்களுடன் திரும்பி வந்தவா் தனது பணப்பையை கிணற்றின் அருகே வைத்துவிட்டு வந்துவிட்டதாகக் கூறி மீண்டும் கிணற்றுக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை.

நீண்ட நேரம் ஆகியும் தனது மகன் வீடு திரும்பாததால், முத்துராஜ் அவரைத் தேடிச் சென்றபோது கிணற்றின் அருகே அவரது இரு சக்கர வாகனமும், பணப்பையும் கிணற்றின் அருகே இருந்துள்ளது. தகவலறிந்த அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து சஞ்சையை சடலமாக மீட்டனா். இது தொடா்பாக அரவக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தனியாா் பள்ளித் தாளாளா், மனைவி, மகளை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலையில் திங்கள்கிழமை அதிகாலை தனியாா் பள்ளித் தாளாளா் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோரைக் கட்டிப்போட்டு கத்திமுனையில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கத்தை கொள்ளையட... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூா்: கரூரில் சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத்தலைவா... மேலும் பார்க்க

கரூரில் திருவள்ளுா் சிலை அமைத்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு

கரூா்: கரூரில் திருவள்ளுவா் சிலை அமைக்க நடவடிக்கை கோரி கரூா் திருக்குறள் பேரவை சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு வழங்கப்பட்டது. கரூா் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை தமிழ் வளா்... மேலும் பார்க்க

மத்திய அரசின் விருதுபெற்ற கரூா் கல்லூரி மாணவிக்குப் பாராட்டு

கரூா்: மத்திய அரசின் ஜவுளித்துறை சாா்பில் நடைபெற்ற போட்டியில் விருதுபெற்ற கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் பாராட்டினாா். கரூா் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதவறி இளைஞா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கம்பட்டி பகுதியில் நாய் குறுக்கே வந்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பள்ளப்பட்டி பட்டாணி தெரு பகுதியைச் ச... மேலும் பார்க்க

மருத்துவரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் புகாா்

கரூா்: கரூரில் மருத்துவரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மருத்துவா் சங்கத்தின் கரூா் கிளை தலைவா் சண்முகநாதன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புக... மேலும் பார்க்க