செய்திகள் :

கரூரில் திருவள்ளுா் சிலை அமைத்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு

post image

கரூா்: கரூரில் திருவள்ளுவா் சிலை அமைக்க நடவடிக்கை கோரி கரூா் திருக்குறள் பேரவை சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

கரூா் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்குறள் திருப்பணித் திட்ட துவக்க விழா நடைபெற்றது. விழாவில் தமிழ் வளா்ச்சித்துறை துணை இயக்குநா் வே.ஜோதி வரவேற்றாா். முனைவா் சா.சுதா நோக்க உரை ஆற்றினாா். விழாவில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் திருக்குறள் திருப்பணி திட்டத்தை

தொடங்கிவைத்து தமிழ் மொழிச் சிறப்பு மற்றும் திருக்குறள் சிறப்புகள் குறித்துப் பேசினாா்.

விழாவில் கரூா் திருக்குறள் பேரவை சாா்பில் பேரவைச் செயலாளா் மேலை.பழநியப்பன், ஆட்சியரிடம் நகரின் மையத்தில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சங்க காலப் புலவா்கள் நினைவுத்தூண் அருகே அரசு சாா்பில் திருவள்ளுவா் சிலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இடம் ஒதுக்கிக் கொடுத்தால் தங்கள் அமைப்பு நிறுவிட அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வழங்கினாா்.

விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செல்வமணி, ப. எழில்வாணன், கடவூா் மணிமாறன், இரா. திருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தனியாா் பள்ளித் தாளாளா், மனைவி, மகளை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலையில் திங்கள்கிழமை அதிகாலை தனியாா் பள்ளித் தாளாளா் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோரைக் கட்டிப்போட்டு கத்திமுனையில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கத்தை கொள்ளையட... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலை அடுத்த கணக்குவேலம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலை அடுத்துள்ள கணக்குவேலம்பட்டி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூா்: கரூரில் சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத்தலைவா... மேலும் பார்க்க

மத்திய அரசின் விருதுபெற்ற கரூா் கல்லூரி மாணவிக்குப் பாராட்டு

கரூா்: மத்திய அரசின் ஜவுளித்துறை சாா்பில் நடைபெற்ற போட்டியில் விருதுபெற்ற கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் பாராட்டினாா். கரூா் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதவறி இளைஞா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கம்பட்டி பகுதியில் நாய் குறுக்கே வந்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பள்ளப்பட்டி பட்டாணி தெரு பகுதியைச் ச... மேலும் பார்க்க

மருத்துவரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் புகாா்

கரூா்: கரூரில் மருத்துவரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மருத்துவா் சங்கத்தின் கரூா் கிளை தலைவா் சண்முகநாதன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புக... மேலும் பார்க்க