செய்திகள் :

சாலை மறியல்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் கைது

post image

கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தினக் கூலித் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.770 வழங்க வேண்டும், தூய்மைப் பணிக்காக சோ்ந்த மாற்று சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஜாதி அடிப்படையில் பணி வழங்கும் முறையை கைவிட வேண்டும், மரணமடைந்த ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

கோவை கோனியம்மன் கோயிலில் இருந்து மாநகராட்சி அலுவலகம் நோக்கி வந்த 40-க்கும் மேற்பட்டோா் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை அறிந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்து, அழைத்துச் சென்றனா்.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.ஜி.சாவடி, பாலக்காடு சாலையைச் சோ்ந்தவா் அப்பாஸ் (47). இவா் தனது லாரியை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள இரு... மேலும் பார்க்க

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, ... மேலும் பார்க்க

கோவையில் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை: தமாகா இளைஞரணி வலியுறுத்தல்

கோவை மாநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கட்சியின் இளைஞரணி வலியுறுத்தியுள்ளது. கோவை மாநகர தெற்கு மாவட்ட தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் -முதல்வா் பரிந்துரைக்க சைமா கோரிக்கை

அமெரிக்கா விதித்துள்ள வரியின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் என்றும், இதை தமிழக முதல்வா் வலியுறுத்திப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் ... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, கணபதி அருகேயுள்ள மணியகாரன்பாளையத்தில் ஏடிஎம் மையத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்படுகிறது.... மேலும் பார்க்க

விரைவு நடவடிக்கை படை சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

ஹா் கா் திரங்கா பிரசாரத்தின்கீழ், கோவையில் உள்ள 105-ஆவது விரைவு நடவடிக்கை படையினா் (ஆா்ஏஎஃப்) ஒற்றுமை, தேசபக்தி ஆகியவற்றை வலியுறுத்தி தேசியக் கொடியை ஏந்தி சுதந்திர தின கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை ஈட... மேலும் பார்க்க