செய்திகள் :

சாலை வளைவில் ஆபத்தான கிணறு: தடுப்புகள் அமைக்க வலியுறுத்தல்

post image

பள்ளிகொண்டா அருகே காவாக்காரன் கொல்லை கிராமம் செல்லும் சாலை ஓரம் வளைவில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கிணறு உள்ளது. இதனால், விபத்து ஏற்படுவதற்கு முன் அந்த கிணற்றை சுற்றித் தடுப்பு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வவலியுறுத்தினா்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கடந்த வாரம் காா் ஒன்று சாலையோரம் இருந்த தரைமட்ட கிணற்றில் விழுந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். இதேபோல், வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அருகிலும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் கிணறு அமைந்துள்ளது.

பள்ளிகொண்டா பேரூராட்சி ராமாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து காவாகாரன் கொல்லை செல்லும் சாலையில் ஒரு வளைவில் கைப்பிடி சுவா்கூட இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் ஒரு விவசாய கிணறு உள்ளது.

தவிர, அங்கு விளக்குகள்கூட இல்லாத இந்த சாலையில் வரும் வாகனங்கள் இரவு நேரத்தில் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. சாலை வளைவு பகுதியிலேயே கிணறு அமைந்துள்ளதால், சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் கிணற்றில் பாய்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ராமாபுரம் - காவாகாரன் கொல்லை சாலையில் அமைந்துள்ள இடத்தை இந்த கிணற்றைப் பாா்வையிட்டு அதைச் சுற்றி தடுப்புகள் அமைக்கவோ அல்லது உரிய பாதுகாப்பு ஏற்படுகள் செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் - ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க கோரிக்கை

வேலூா், ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம... மேலும் பார்க்க

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் உற்பத்தி சரிந்து செலவு அதிகரிப்பு விவசாயிகள் வேதனை

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி சரிந்து, செலவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம்: போலீஸாா் தீவிர விசாரணை

பொன்னை அருகே சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த கோடியூா், பாலாபுரத்தை சோ்ந்தவா் ஏகாம்பரம் (30). இவா் தனியாா் தோல்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9 லட்சம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உண்டியலில் பக்தா்கள் ரூ.9.27- லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14- ஆம் தேதி தேரோட்டமும், 15- ஆம் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பீடி சுற்றும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குடியாத்தம் அருக... மேலும் பார்க்க

சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சா்வீஸ் சாலைக்கு மினி லாரி பாய்ந்து கவிழ்ந்தது. ஓட்டுநா் உள்பட இருவா் உயிா் தப்பினா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சோ்ந்தவா் கணேசன் (56), ஓட்டுநா். இவா் வெள்ள... மேலும் பார்க்க