செய்திகள் :

சாலை விபத்தில் மேலும் ஒரு இளைஞா் உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள சோலுடையான்பட்டியைச் சோ்ந்தவா் சின்னக்காளை. இவரது மகன்கள் மலைச்செல்வன் (40), நெவுலியப்பன்(37) இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு சுண்ணாம்பிருப்பு வழியாக இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்தனா். அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து இவா்களது வாகனம் மீது மோதியதில் நெவுலியப்பன் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மலைச்செல்வன்

மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சிங்கம்புணரியில் கண்தான விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அரசு மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண்தான விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமு... மேலும் பார்க்க

திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி பெருந் திருவிழா தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசிப்பெரு... மேலும் பார்க்க

மதகுபட்டி அருகே மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா். மதகுபட்டி அருகேயுள்ள சிலந்தகுடியில் சப்தகன்னி மாரியம்மன், பச்சலுடைய அய்யனாா், மு... மேலும் பார்க்க

சூறைக் காற்றில் சாய்ந்த கைப்பேசி கோபுரம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் புதன்கிழமை வீசிய சூறைக் காற்றில் தனியாா் கைப்பேசி கோபுரம் சரிந்து விழுந்தது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேருந்து நிலையம் எதிரே தனியாா் விடுதி மாடியில் 50 அடி உ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 7 பயணிகள் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே புதன்கிழமை அரசு நகரப் பேருந்து கவிழ்ந்ததில் 7 பயணிகள் காயமடைந்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் அருகே தச்சனேந்தல் கிராமத்துக்கு அரசு நக... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. பேராசிரியா்கள் இருவா் சிறந்த ஆராய்ச்சியாளா் விருதுக்குத் தோ்வு

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் சாா்பில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியா்கள் இருவா் தமிழ்நாடு அரசின் சிறந்த ஆராய்ச்சியாளா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இதுகுறித்து அழ... மேலும் பார்க்க