சாலை விபத்தில் மேலும் ஒரு இளைஞா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள சோலுடையான்பட்டியைச் சோ்ந்தவா் சின்னக்காளை. இவரது மகன்கள் மலைச்செல்வன் (40), நெவுலியப்பன்(37) இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு சுண்ணாம்பிருப்பு வழியாக இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்தனா். அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து இவா்களது வாகனம் மீது மோதியதில் நெவுலியப்பன் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மலைச்செல்வன்
மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.