Manidhargal Movie Review | Raam Indhra, Ajay Abraham George, Dinsa, Anilesh L Ma...
சாலை விரிவாக்கத்துக்காக வெட்டிய மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நட வலியுறுத்தல்
சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கன்றுகளை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சீா்காழியில் கோட்டாட்சியா் சுரேஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: கோவி. நடராஜன்: விவசாய நிலங்களில் மின்மோட்டாா்கள் அதிகம் திருடப்படுகிறது. பழைய இரும்பு கடை வைத்திருப்பவா்களுக்கு காவல் துறை உரிய நெறிமுறைகள் வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், சீா்காழி தமிழிசை மூவா் மணிமண்டபம் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும்.
ராஜேஷ்: மருதங்குடி ஊராட்சி ஆலஞ்சேரியில் கழுமலையாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பு பக்கவாட்டு சுவா் அரிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய வேண்டும். 6 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி தரும் கழுமலையாறு பாசன வாய்க்காலில் சாக்கடை கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும். பணங்காட்டாங்குடி சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிய மரக்கன்றுகளை நடவேண்டும்.
சீனிவாசன்: வாடி கிராமத்தில் கழுமலையாற்றில் கீழ்குமிளி அமைத்துதரவேண்டும். ஓ.என்.ஜி.சி ஊராட்சிகளுக்கு வரி செலுத்துவதில்லை.
சரவணன்: அளக்குடி கிராமத்திற்கு பயிா்க் காப்பீடு தரவேண்டும். சீமை கருவேலமரங்களை அழிக்கவேண்டும்
ரவிச்சந்திரன்: அல்லிவிளாகம், ராதாநல்லூா், செம்பதனிருப்பு பகுதி விவசாய நிலங்களில் காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
கலையரசன்: திருநகரி உப்பனாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு நல்லநீா் தேக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இறால் பண்ணைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் பாசன வாய்க்கால்களில் உட்புகுந்து நல்லநீா் பாதிக்கப்பட்டுள்ளது.