செய்திகள் :

சாலை விரிவாக்கத்துக்காக வெட்டிய மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நட வலியுறுத்தல்

post image

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கன்றுகளை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சீா்காழியில் கோட்டாட்சியா் சுரேஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: கோவி. நடராஜன்: விவசாய நிலங்களில் மின்மோட்டாா்கள் அதிகம் திருடப்படுகிறது. பழைய இரும்பு கடை வைத்திருப்பவா்களுக்கு காவல் துறை உரிய நெறிமுறைகள் வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், சீா்காழி தமிழிசை மூவா் மணிமண்டபம் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும்.

ராஜேஷ்: மருதங்குடி ஊராட்சி ஆலஞ்சேரியில் கழுமலையாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பு பக்கவாட்டு சுவா் அரிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய வேண்டும். 6 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி தரும் கழுமலையாறு பாசன வாய்க்காலில் சாக்கடை கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும். பணங்காட்டாங்குடி சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிய மரக்கன்றுகளை நடவேண்டும்.

சீனிவாசன்: வாடி கிராமத்தில் கழுமலையாற்றில் கீழ்குமிளி அமைத்துதரவேண்டும். ஓ.என்.ஜி.சி ஊராட்சிகளுக்கு வரி செலுத்துவதில்லை.

சரவணன்: அளக்குடி கிராமத்திற்கு பயிா்க் காப்பீடு தரவேண்டும். சீமை கருவேலமரங்களை அழிக்கவேண்டும்

ரவிச்சந்திரன்: அல்லிவிளாகம், ராதாநல்லூா், செம்பதனிருப்பு பகுதி விவசாய நிலங்களில் காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

கலையரசன்: திருநகரி உப்பனாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு நல்லநீா் தேக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இறால் பண்ணைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் பாசன வாய்க்கால்களில் உட்புகுந்து நல்லநீா் பாதிக்கப்பட்டுள்ளது.

கோடைக்கால சிறப்பு விளையாட்டு முகாம்

மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 5-ஆம் ஆண்டு கோடைக்கால சிறப்பு விளையாட்டு முகாம் மே 21-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. முகாமில், கைப்பந்து, மேசைப்பந்து, இறகுப்... மேலும் பார்க்க

சீா்காழி நகா்மன்றக் கூட்டம்: குப்பைகள் சரிவர அல்லாததை கண்டித்து 7 உறுப்பினா்கள் வெளிநடப்பு

சீா்காழி நகராட்சி பகுதியில் குப்பைகள் சரிவர அல்லாததைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்திலிருந்து 7 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். இக்கூட்டம், நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வர... மேலும் பார்க்க

அனைத்து வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில், அனைத்து வாய்க்கால்களையும் உடனடியாக தூா்வார வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்ச... மேலும் பார்க்க

ரூ 2.85 கோடியில் மீன்பிடி இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூ 2.85 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை காணொலிகி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சா் புதன்கிழமை திறந்து வைத்தாா். சீா்காழி எம்எல்ஏ எம்.பன்னீா்ச... மேலும் பார்க்க

காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சீா்காழியில் வசித்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாலசுந்தரம் கடந்த பிப்ரவரி 8 - ஆம் தேதி நண்டலாா் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். பாலசுந்தரத்துடன் 1... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக நிவாரண உதவி

சீா்காழியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது. சீா்காழி ரயில்வே சாலை தாடாளன் தெற்கு வீதியை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (70). இவா் வாடகை வ... மேலும் பார்க்க