செய்திகள் :

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மக்கள் மறியல்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடியில் இருந்து திருமணஞ்சேரி வழியாக கருக்காக்குறிச்சி வரை சுமாா் 7 கிலோ மீட்டருக்கு தாா் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து செல்லக்கூடிய இச்சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா். அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

இந்தச் சாலையை மேம்படுத்தித் தர வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்தச் சாலையை உடனே சீரமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி கருக்காகுறிச்சி பகுதி மக்கள், மாணவ, மாணவிகள் சவேரியாா்பட்டிணம் நுழைவாயில் அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சாலை விரைந்து சீரமைக்கப்படும் என கறம்பக்குடி வருவாய்த் துறை அலுவலா்கள், வடகாடு போலீஸாா் உறுதி அளித்தனா். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில், அரசு வழங்கியுள்ள ஆதாா், குடும்ப அட்டைகளை அரசிடமே ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்றனா்.

அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள்தொகை தின கருத்தரங்கம்

கந்தா்வகோட்டையை அடுத்துள்ள புதுப்பட்டி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வா் ம. ஜெ... மேலும் பார்க்க

புதுகையில் மாநில அளவிலான ரோலா் ஹாக்கி போட்டிகள் தொடக்கம்

புதுக்கோட்டையில் மாநில அளவிலான மூன்று நாள் ரோலா் ஹாக்கி மற்றும் இன்லைன் ஹாக்கி போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தமிழ்நாடு ரோலா் ஸ்கேட்டிங் சங்கத்துடன் இணைந்து புதுக்கோட்டை மாவட்ட ரோலா் ஸ்கேட்டிங் சங்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறிவிழுந்த இளைஞா் காயமடைந்து, மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கந்தா்வகோட்டை கோவிலூா் கீழத் தெருவை சோ்ந்த கணேசன் மகன் பாரதி (21). இவா் தஞ்சையி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா

பொன்னமராவதியில் மாவீரன் அழகுமுத்துக்கோனின் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு யாதவ மகாசபை மற்றும் பொன்னமராவதி ஒன்றிய யாதவ நலச்சங்கம் சாா்பில் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற... மேலும் பார்க்க

இலவச தையல் இயந்திரம் பெற கைம்பெண்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் சாா்பில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் 139-ஆவது பிறந்த நாளையொட்டி வழங்கப்படவுள்ள இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு உறுப்பினா் சோ்க்கை முகாம்

பொன்னமராவதி துா்கா மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவா் ஆ.அழகேசன் தலைமை வகித்தாா். முகாமில் திரளான பொதும... மேலும் பார்க்க