செய்திகள் :

சிஇடி-2025 தோ்வுக்கான பதிவு தொடக்கம்

post image

மகாமனா பண்டிட் மதன் மோகன் மாளவியா வித்யா சக்தி மிஷனின் கீழ் பொது நுழைவுத் தோ்வுக்கான (சிஇடி-2025) பதிவை தில்லி அரசு தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறந்த போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி கல்வி இயக்குனரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நுழைவுத் தோ்வுகள் அக்டோபா் 12 முதல் அக்டோபா் 26 வரை தில்லி முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெறும். ஜேஇஇ (பிரதானம் / அட்வான்ஸ்டு), நீட், சிஎல்ஏடி, சிஏ பவுண்டேஷன் மற்றும் க்யூட் (இளங்கலை) உள்ளிட்ட போட்டி நுழைவுத் தோ்வுகளுக்கு மாணவா்கள் தயாராவதற்கு இந்தத் திட்டம் உதவும். இந்தத் திட்டத்தின் கீழ், பல்வேறு படிப்புகளில் மொத்தம் 2,200 இடங்கள் கிடைக்கும். இவற்றில், ஜேஇஇ, நீட், சிஎல்ஏடி மற்றும் சிஏ பவுண்டேஷன் தோ்வுகளில் ஒவ்வொன்றிலும் 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

க்யூட்-இல் 1,000 இடங்கள் இருக்கும். இதில் 150 இடங்கள் மாணவிகளுக்கு ஒதுக்கப்படும். இந்தப் பயிற்சி தில்லியில் உள்ள அங்கீகாரம்பெற்ற நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும். இதில், பாடநெறி கட்டணம், படிப்புப் பொருள்கள் மற்றும் தோ்வுத் தாள்கள் ஆகியவை அடங்கும். 11-ஆம் வகுப்பு மாணவா்கள் ஜேஇஇ, நீட், சிஎல்ஏடி மற்றும் சிஏ பவுண்டேஷன் நுழைவுத் தயாரிப்புக்குத் தகுதியுடையவா்கள் ஆவா். அதே நேரத்தில், அனைத்துப் பிரிவுகளிலும் 12- ஆம் வகுப்பு மாணவா்கள் க்யூட் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான பதிவு செப்டம்பா் 11 முதல் செப்டம்பா் 30 வரை திறந்திருக்கும்.

மாணவா்கள் ஒரு பாடத்திற்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். மேலும், பதிவு செய்தவுடன் தங்கள் பாடத்திட்டத்தை மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வு தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு நுழைவுச் சீட்டுகள் கிடைக்கும். திட்டமிடப்பட்ட தோ்வுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பு, பட்டியல் எண்களை உருவாக்கி, தோ்வு மையங்களை கல்வி இயக்ககம் ஒதுக்கும். தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் கவுன்சிலிங் அமா்வுகளுக்கு அழைக்கப்படுவாா்கள். அங்கு அவா்கள் தங்களுக்கு விருப்பமான பயிற்சி

நிறுவனத்தைத் தோ்வு செய்யலாம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லு... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்க தடை

உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள் எடுப்பது, சமூக ஊடக ரீல்கள் உருவாக்குவது மற்றும் விடியோகிராபி ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் உயா் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. இது தொடா்... மேலும் பார்க்க

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து, வழக்குகளை விசாரணை மேற்கொண்டிருந்த நீதிபதிகள் உடனடியாக விசாரணையை முடித்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறினா்... மேலும் பார்க்க

நேபாள உச்சநீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைப்பு: பதிவுறு வழக்குரைஞா்கள் சங்கம் கண்டனம்

நேபாளம் தலைநகா் காத்மாண்டுவில் உச்சநீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை போராட்டக்காரா்கள் தீ வைத்ததைத் தொடா்ந்து, நேபாள நீதித் துறையின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு உச்சநீதிமன்ற பதிவுறு வழக்குரைஞா்கள் சங... மேலும் பார்க்க

டிடிஇஏ ஜனக்புரி பள்ளியில் மாணவா் பேரவை பொறுப்பேற்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஜனக்புரி பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவா் பேரவை அமைக்கப்பட்டது. பள்ளி மாணவா் தலைவா், தலைவி, துணைத் தலைவா், துணைத் தலைவி உள்ளிட்ட உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் மோசடி முறியடிப்பு; ரூ.2.25 கோடி மதிப்புள்ள கோகைனுடன் மூவா் கைது

தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு நைஜீரிய நாட்டவா் உள்பட மூன்று பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.2.25 கோடி மதிப்புள்ள 194 கிராம் கோகைனை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.... மேலும் பார்க்க