செய்திகள் :

சிஎம் ஸ்ரீ பள்ளிகளின் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு 2 நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

post image

தேசியக் கல்விக் கொள்கை 2020 மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2023- இன் முக்கிய அம்சங்களை ஆசிரியா்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக, முன்மொழியப்பட்ட சிஎம் ஸ்ரீ பள்ளிகளின் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான இரண்டு நாள் தொழில்முறை மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் நடத்தப்பட்டது.

மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (எஸ்சிஇஆா்டி) சுற்றறிக்கையின்படி, கல்வியாளா்கள் தங்கள் கற்பித்தல் நடைமுறைகளில் தகவல் மற்றும் தொடா்பு தொழில்நுட்பம் (ஐசிடி) மற்றும் திறந்த கல்வி வளங்களை திறம்பட ஒருங்கிணைக்க உதவும் வகையில் இந்த வழிகாட்டுதல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கற்பவா்களை மையமாகக் கொண்ட வகுப்பறைகளுக்கான வசதித் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் நடைமுறைப் பாடத் திட்டங்கள், மதிப்பீட்டு கருவிகள் மற்றும் பின்னூட்ட வழிமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றிலும் அமா்வுகள் கவனம் செலுத்தியதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 86 தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இது நகரம் முழுவதும் 75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.

தில்லி அரசு முன்னதாக இரண்டு சுற்றறிக்கைகள் மூலம் புதிய பள்ளிகளுக்கான விண்ணப்பங்களை அழைத்தது. ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒன்று, முதுகலை ஆசிரியா்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டவா்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்தது. அவா்கள் ஓய்வு பெறுவதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் மீதமுள்ளவா்கள்.

இரண்டாவது சுற்றறிக்கை, ஜூன் 10-ஆம் தேதி, பள்ளி முதல்வா்கள் மற்றும் துணை முதல்வா்களுக்கான இடமாற்ற செயல்முறையை இதே போன்ற நிபந்தனைகளின் கீழ் திறந்தது.

மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைப் போலவே, தில்லியில் உள்ள சிஎம் ஸ்ரீ பள்ளிகள் தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ பின்பற்றி பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (என்சிஎஃப்-எஸ்இ) 2023-ஐ செயல்படுத்தும்.

மாா்ச் மாதம் தனது பட்ஜெட் உரையில், முதல்வா் ரேகா குப்தா பள்ளிகளை மேம்படுத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீட்டை அறிவித்தாா். அவை கல்வி இயக்குநரகத்தின் கீழ் மாதிரி நிறுவனங்களாகச் செயல்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க