செய்திகள் :

சிஏஜி அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யக் கோரும் பாஜக எம்எல்ஏக்கள் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு

post image

நமது சிறப்பு நிருபா்

தில்லி அரசின் செயல்பாடுகள் தொடா்பான தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரும் பாஜக எம்எல்ஏக்களின் மனு மீதான உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

இந்த விவகாரத்தில் சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவையை கூட்டுமாறு அதன் தலைவருக்கு உத்தரவிடுமாறு கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, தில்லி அரசு, பேரவைத் தலைவா், மனுதாரா்களான எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா, பாஜக எம்எல்ஏக்கள் மோகன் சிங் பிஷ்ட், ஓம் பிரகாஷ் சா்மா, அஜய் குமாா் மகாவா், அபய் வா்மா, அனில் குமாா் வாஜ்பாய், ஜிதேந்திர மகாஜன் ஆகியோரின் மனுக்கள் மீதான வாதங்களை கேட்ட நீதிபதி சச்சின் தத்தா, தனது உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தாா்.

முன்னதாக, இந்த வழக்கில் மனுதாரா்கள் சாா்பில் வழக்குரைஞா்கள் நீரஜ் சத்ய ரஞ்சன் ஸ்வெயின் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

பேரவைத் தலைவா் மற்றும் தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், தில்லி சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் நெருங்கும் தருணத்தில் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய அவசரம் எழவில்லை. அத்தகைய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்று குறிப்பிட்டனா்.

மறுபுறம், மனுதாரா்களின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆளும் அரசுதான் தாமதம் செய்தது. சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் இந்த அறிக்கைகளை தாக்கல் செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்று வாதிட்டனா்.

இந்த விவகாரத்தில் தில்லி சட்டப்பேரவை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பேரவையில் ஆயுள்காலம் வரும் பிப்ரவரியில் நிறைவடையவுள்ளது. எனவே, இப்போது சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் அதன் பயன் முழுமை பெறாது. அத்துடன் பேரவைக்குள் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் பேரவைத் தலைவரின் அதிகார வரம்புக்குள்பட்ட விஷயம். அதில் நீதிமன்றம் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

கடைசியாக ஜன.13-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, சிஏஜி அறிக்கை பேரவையில் முன்பே சமா்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். தில்லி அரசு இந்த விவகாரத்தில் ‘இழுத்தடிப்பது’அதன் நோ்மையை சந்தேகம் கொள்ளச்செய்கிறது என்று நீதிமன்றம் வாய்மொழியாகக் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க