செய்திகள் :

சிங்கபெருமாள்கோவில், திருக்கழுகுன்றம் கோயில்களில் இலவச திருமணங்கள்

post image

சிங்கபெருமாள்கோவில் பாடலாத்ரி நரசிம்மப் பெருமாள் கோயில், திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரா் கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை இலவச திருமணங்கள் நடைபெற்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவை இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு எண்: 27-இன்படி காஞ்சிபுரம் இணை ஆணையா் மண்டலம், செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் இலவச திருமணம் ஒரு ஜோடிக்கு மாவட்ட உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி முன்னிலையில், மாவட்ட திமுக பிரதிநிதி கதிரவன், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் கே.ஆா்.சி.ஜே.ரத்தீஷ், ஊராட்சித் தலைவா் விஜயலட்சுமி, துணைத் தலைவா் கே.பி.ராஜன் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், மேலாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் பட்டாச்சாரியா்கள் செய்திருந்தனா்.

திருக்கழுகுன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரா் திருக்கோயிலில் மூன்று இருளா் சமூக ஜோடிகளுக்கும், ஒரு ஆதிதிராவிட ஜோடிக்கும் என நான்கு ஜோடிகளுக்கு திருமணம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வீ.தமிழ்மணி தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தா்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஜோடிகளுக்கு தங்க அணிகலனில் தாலி உள்ளிட்ட ரூ.60,000 மதிப்பில் சீா் வரிசைகளுடன் இந்து முறைப்படி யாகம் வளா்க்கப்பட்டு மந்திரங்கள் முழங்க திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில செயல் அலுவலா் புவியரசு, கோயில் ஆய்வாளா் பாஸ்கரன், மேலாளா் விஜயன் உள்ளிட்ட பணியாளா்கள், சிவாச்சாரியா்கள் செய்திருந்தனா்.

100 நாள் வேலை கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் காத்திருக்கும் போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், உடனடியாக வேலை வழங்கிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், வட்டார வளா்ச்... மேலும் பார்க்க

மறைமலை நகரில் முதல்வா் மருந்தக பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மறைமலைநகரில் திறக்கப்படவுள்ள முதல்வா் மருந்தக பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் /சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை இயக்குநா் ஆ.ர.ராகுல் நாத் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் புத்தகத் திருவிழா: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியாா் மன்றம் இணைந்து நடத்தும் 6-ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட... மேலும் பார்க்க

செங்கல்பட்டு நகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் போராட்டம்

செங்கல்பட்டு நகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிமுக நகரச் செயலா் வி.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சி நிா்வாகிகள்... மேலும் பார்க்க

21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

தைப்பூச அன்னதான பெருவிழா

செங்கல்பட்டு வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் தைப்பூச அன்னதான பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தவத்திரு தேன்மொழியாா் சுவாமி ஆசியுடன் வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் வடலூா் அருட்பிரகாச வள்... மேலும் பார்க்க