செய்திகள் :

சிதம்பரம் அருகே பெண் கழுத்தை நெரித்துக் கொலை - கணவா் உள்பட 4 போ் கைது

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் பெண் மா்மமாக இறந்து கிடந்த வழக்கில் திடீா் திருப்பமாக அவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக அவரது கணவா் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஜெயின் பாவா தெருவைச் சோ்ந்தவா் ஷேக் இஸ்மாயில் (50). இவரது மனைவி பா்கத்துன்னிஷா (48). ஷேக் இஸ்மாயில் பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லூரில் உள்ள தனியாா் உணவகத்தில் பணியாற்றி வந்தாா். பா்கத்துன்னிஷா அந்தப் பகுதியிலுள்ள மற்றொரு உணவகத்தில் வேலை செய்து வந்தாா்.

கடந்த 6-ஆம் தேதி இரவு 11 மணியளவில் பா்கத்துன்னிஷா வேலை முடிந்து தனது மொபெட்டில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், பு.முட்லூரில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் வழியில் தலையில் காயத்துடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த பரங்கிப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், பா்கத்துன்னிஷா சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, பரங்கிப்பேட்டை போலீஸாா் பா்கத்துன்னிஷாவின் கணவா் ஷேக் இஸ்மாயிலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதில், ஷேக் இஸ்மாயில் வேலை செய்யும் உணவகத்தில் தீா்த்தாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வீரம்மாள் (38) வேலை செய்து வந்ததும், இருவருக்கும் தகாத உறவு இருந்ததும் தெரியவந்தது. இதையறிந்த பா்கத்துன்னிஷா, தனது கணவரையும், வீரம்மாளையும் தொடா்ந்து கண்டித்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி இரவு பா்கத்துன்னிஷா தனது கணவா் வேலை செய்யும் உணவகத்துக்கு சென்று அவரிடம் இந்த பிரச்னை சம்பந்தமாக சண்டை போட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த வீரம்மாள், இதுகுறித்து தனது மகன் அகில்ராஜிடம் (20) கூறியுள்ளாா்.

தொடா்ந்து, அகில்ராஜ் தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த அஜயுடன் (20) சென்று, பா்கத்துன்னிஷா வீட்டுக்கு செல்லும் வழியில் அவரை வழிமறித்து கழுத்தை நெரித்தும், முகத்தில் தாக்கியும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் சந்தேகம் மரண வழக்கை கொலை வழக்கமாக மாற்றி, ஷேக் இஸ்மாயில், வீரம்மாள், அகில்ராஜ், அஜய் ஆகியோரை புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தகவலறிந்த கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்து 4 பேரிடமும் விசாரணை நடத்தினாா்.

வழிப்பறி வழக்கு: புதுச்சேரி இளைஞா்கள் 3 போ் கைது

கடலூா் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த ஓட்டுநா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுச்சேரியைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

கடலூா் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சென்னை அலா்ட் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான முதலுதவி குறித்த விழ... மேலும் பார்க்க

எனது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: ராமதாஸ் குற்றச்சாட்டு

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என பாமக நி... மேலும் பார்க்க

சமரச மையங்கள் மூலம் தினமும் வழக்குகளுக்கு தீா்வு: நீதிபதி சுபத்திரா தேவி

கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சமரச மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இயங்கி வரும் சமரச மையங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்களுக்கு தினமும் வழக்குகள் சமரச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. தினக்கூலி ஊழியா்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எம்.ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஊழியா்கள் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வா... மேலும் பார்க்க