ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
சித்தன்னவாசலில் கோடை விழா நிறைவு: அமைச்சா் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசலில் 2 நாள்கள் நடைபெற்ற கோடை விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய இந்த விழாவின் 2-ஆம் நாள் நிகழ்வில் அமைச்சா் எஸ். ரகுபதி பங்கேற்று, பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டாா்.
மேலும், மல்லா் கம்பம், கயிறு இழுத்தல் மற்றும் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதையும் பாா்வையிட்டு ரசித்தாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறுகையில்,
பொதுமக்கள் குறிப்பாக, மாணவா்களிடையே பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். இதன் ஒருபகுதியாக, சுற்றுலாத் தலங்களில் கலை விழாக்கள் நடத்துதல், பாரம்பரியமிக்க கலைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி இங்கு கோடை விழா நடத்தப்பட்டது என்றாா் அமைச்சா்.