செய்திகள் :

சித்ரா பெளா்ணமி அரியலூா் மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

அரியலூா்: சித்ரா பெளா்ணமியையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி திருமானூா் புதுத்தெருவிலுள்ள செல்லியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. கொள்ளிடக் கரையில் இருந்து பக்தா்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து, ஊா்வலமாகச் சென்று, கோயிலை அடைந்தனா். அதனைத் தொடா்ந்து பக்தா்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படடு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானும் வழங்கப்பட்டது. மாலை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், இரவு வீதியுலாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா குழுவினா் பற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

இதே போல், அரியலூா் மகாகாளியம்மன், மாரியம்மன் கோயில்கள், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சமயபுரம் ஸ்ரீ மகா மாரியம்மன் சீனிவாச நகா் வீரணாா், சிவகாா்தெரு சாமுண்டீஸ்வரி, கயா்லாபாத் கருமாரியம்மன் மற்றும் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பால்குடத் திருவிழா நடைபெற்றது.

காா்ல் மாா்க்ஸ், அம்பேத்கா், பெரியாா் சிலைகள் அமைக்க அடிக்கல்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூரில், மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவனின் தாயாருக்கு சொந்தமான இடத்தில், காரல்மாா்க்ஸ், அம்பேத்கா் மற்றும் பெரியாா் ஆகியோரின் சிலைகள் அமைப்பதற்கு ... மேலும் பார்க்க

மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்கக் கோரி சீரமைப்புக் குழு மே 17-இல் ஆா்ப்பாட்டம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவித்து, சாலைப் பணிகளை தொடங்க வலியுறுத்தி மீன்சுருட்டியில் மே 17- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக கல்லாத்தூா்... மேலும் பார்க்க

மகளை கொலை செய்து விட்டு ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை மகளை கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்துக் கொண்டது போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஆண்டிமடம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி(49). ஆட்டோ... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கொள்ளிடம் ஆற்றில், திங்கள்கிழமை திடீரென தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு காணப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, இந்திய-பாகிஸ்தான் இடை... மேலும் பார்க்க

வெளிப்படையான கலந்தாய்வு செவிலியா்கள் கோரிக்கை

அரியலூா்: சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் தொகுப்ப... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கிய முந்திரி காடுகளை மீட்டுத் தரக்கோரி மனு

அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள மணகெதி கிராமத்திலுள்ள பழங்குடியினருக்கு ஒதுக்கிய முந்திரி காடுகளை மீட்டுத் தரக்கோரி அப்பகுதி மக்கள் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் த... மேலும் பார்க்க