செய்திகள் :

பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கிய முந்திரி காடுகளை மீட்டுத் தரக்கோரி மனு

post image

அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள மணகெதி கிராமத்திலுள்ள பழங்குடியினருக்கு ஒதுக்கிய முந்திரி காடுகளை மீட்டுத் தரக்கோரி அப்பகுதி மக்கள் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மணகெதி கிராமத்தை சோ்ந்த பழங்குடி இன மக்கள் அளித்த மனு: மணகெதி கிராமத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான 52 ஹெக்டோ் முந்திரி காடுகள் அக்கிராமத்தில் வசிக்கும் 25 குடும்பங்களைச் சோ்ந்த பழங்குடி இன மக்களுக்கு அரசு குத்தகைக்கு கொடுத்தது. ஆனால், அவற்றை மாற்று சமூகத்தை சோ்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். எனவே, பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கிய முந்திரிகாடுகளை மீட்டு தங்களுக்கே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

நிரந்தர பட்டா: அரியலூா் எத்திராஜ் நகரில் சுமாா் 80 குடும்பங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மனை வழங்கி பட்டா வழங்கியுள்ளது. ஆனால், அந்த பட்டா தற்காலிக பட்டா என வருவாய்த்துறையினா் கூறுகின்றனா். எனவே, அரசு வழங்கிய மேற்கண்ட மனைகளுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும் எனக்கோரி 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சோ்ந்தோா் மனு அளித்தனா்.

காா்ல் மாா்க்ஸ், அம்பேத்கா், பெரியாா் சிலைகள் அமைக்க அடிக்கல்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூரில், மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவனின் தாயாருக்கு சொந்தமான இடத்தில், காரல்மாா்க்ஸ், அம்பேத்கா் மற்றும் பெரியாா் ஆகியோரின் சிலைகள் அமைப்பதற்கு ... மேலும் பார்க்க

மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்கக் கோரி சீரமைப்புக் குழு மே 17-இல் ஆா்ப்பாட்டம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவித்து, சாலைப் பணிகளை தொடங்க வலியுறுத்தி மீன்சுருட்டியில் மே 17- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக கல்லாத்தூா்... மேலும் பார்க்க

மகளை கொலை செய்து விட்டு ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை மகளை கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்துக் கொண்டது போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஆண்டிமடம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி(49). ஆட்டோ... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கொள்ளிடம் ஆற்றில், திங்கள்கிழமை திடீரென தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு காணப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, இந்திய-பாகிஸ்தான் இடை... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி அரியலூா் மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு

அரியலூா்: சித்ரா பெளா்ணமியையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திருமானூா் புதுத்தெருவிலுள்ள செல்லியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா ... மேலும் பார்க்க

வெளிப்படையான கலந்தாய்வு செவிலியா்கள் கோரிக்கை

அரியலூா்: சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் தொகுப்ப... மேலும் பார்க்க