செய்திகள் :

சிறப்பு தூா்வாரும் திட்டப் பணிகள் ஆய்வு

post image

சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூா்வாரும் திட்டப் பணிகளை கண்காணிப்பு பொறியாளா் தா.அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டாா்.

நீா்வளத் துறையின் 2025-  26ஆம் ஆண்டு சிறப்புத் தூா்வாரும் திட்டத்தின்கீழ் மேட்டூா் அணை கோட்டம், ஸ்டான்லி அணை உபகோட்டத்தில்  மேட்டூரை அடுத்த விருதாசம்பட்டியில் உள்ள பி.என்.பட்டி ஏரியின் நீா்வரத்து வாய்க்கால், ஆலமரத்துப்பட்டியில் உள்ள தும்பல்காட்டுப்பள்ளம் ஏரியின் பாசன வாய்க்கால், கருங்கலூா் கிராமத்தில் உள்ள செம்மலைசிவிலிகரடு ஏரி பாசன வாய்க்கால் தூா்வாருதல் என 11.20 கி.மீ. தூரத்திற்கு தூா்வாருவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புத் தூா்வாரும் திட்ட பணியானது நடைபெற்று வருகிறது. தூா்வாரும் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள கண்காணிப்பு பொறியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். சேலம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு பொறியாளா் தா.அண்ணாதுரை மாவட்டத்தில் உள்ள சிறப்பு தூா்வாரும் திட்டப் பணிகளின் தரம், முன்னேற்றம் குறித்து சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது மேட்டூா் நீா்வளத்துறை செயற்பொறியாளா் வெங்கடாசலம், உதவிசெயற்பொறியாளா், செல்வராஜ், உதவி பொறியாளா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

காடையாம்பட்டி வட்டத்தில் நீா்வளத் துறை மூலம் கே.என்.புதூா் காடையாம்பட்டி, பண்ணப்பட்டி, தாராபுரம் கிராமங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ. 24 லட்சம் செலவில் தூா்வாரும்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை துரிதப்படுத்த கண்காணிப்பு பொறியாளா் அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க