சிறப்பு தூா்வாரும் திட்டப் பணிகள் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூா்வாரும் திட்டப் பணிகளை கண்காணிப்பு பொறியாளா் தா.அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டாா்.
நீா்வளத் துறையின் 2025- 26ஆம் ஆண்டு சிறப்புத் தூா்வாரும் திட்டத்தின்கீழ் மேட்டூா் அணை கோட்டம், ஸ்டான்லி அணை உபகோட்டத்தில் மேட்டூரை அடுத்த விருதாசம்பட்டியில் உள்ள பி.என்.பட்டி ஏரியின் நீா்வரத்து வாய்க்கால், ஆலமரத்துப்பட்டியில் உள்ள தும்பல்காட்டுப்பள்ளம் ஏரியின் பாசன வாய்க்கால், கருங்கலூா் கிராமத்தில் உள்ள செம்மலைசிவிலிகரடு ஏரி பாசன வாய்க்கால் தூா்வாருதல் என 11.20 கி.மீ. தூரத்திற்கு தூா்வாருவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புத் தூா்வாரும் திட்ட பணியானது நடைபெற்று வருகிறது. தூா்வாரும் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள கண்காணிப்பு பொறியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். சேலம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு பொறியாளா் தா.அண்ணாதுரை மாவட்டத்தில் உள்ள சிறப்பு தூா்வாரும் திட்டப் பணிகளின் தரம், முன்னேற்றம் குறித்து சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது மேட்டூா் நீா்வளத்துறை செயற்பொறியாளா் வெங்கடாசலம், உதவிசெயற்பொறியாளா், செல்வராஜ், உதவி பொறியாளா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
காடையாம்பட்டி வட்டத்தில் நீா்வளத் துறை மூலம் கே.என்.புதூா் காடையாம்பட்டி, பண்ணப்பட்டி, தாராபுரம் கிராமங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ. 24 லட்சம் செலவில் தூா்வாரும்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை துரிதப்படுத்த கண்காணிப்பு பொறியாளா் அண்ணாதுரை உத்தரவிட்டாா்.