செய்திகள் :

சிறுதானிய இயக்கத்தில் மானிய உதவி திட்டங்கள்: விவசாயிகளுக்கு அழைப்பு

post image

அரியலூா் வட்டாரத்தில் சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகள், தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில், மானிய உதவித் திட்டங்களைப் பெறலாம் என்றாா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் வட்டாரத்தில் 2025-2026 ஆண்டு கம்பு பயிா் 400 ஏக்கா் பயிரிட திட்டமிடப்பட்டு வேளாண் துறை மூலம் தமிழ்நாடு சிறுதானிய தொகுப்பு செயல் விளக்கம் மற்றும் மாற்றுப் பயிா் சாகுபடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு மானிய உதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சிறுதானிய தொகுப்பு செயல் விளக்கத்தில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.6 ஆயிரம் மானிய விலையில் கம்பு விதை, திரவ உயிா் உரம், நுண்ணூட்ட கலவை, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், இயற்கை இடுபொருள்கள் ஆகியன வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மானிய உதவி திட்டங்கள் நில உடமை பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க இயலும்.

எனவே, இதுவரையில் தங்களது நிலையுடமை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது கிராமங்களில் பதிவு செய்துள்ள இல்லம் தேடி கல்வி அல்லது மகளிா் திட்ட தன்னாா்வலா்கள் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொண்டு தங்களது நில உடமை பதிவு செய்ய வேண்டும்.

இந்த திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் நேரடியாக உழன் செயலில் பதிவு செய்தோ அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொண்டு முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பேருந்தில் இளைஞரை தாக்கிய வழக்கில் மேலும் 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பேருந்தினுள் இளைஞரை தாக்கிய வழக்கில் மேலும் 3 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். ஆண்டிமடத்தை அடுத்த இறவாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (32)... மேலும் பார்க்க

வைகோ குறித்து அவதூறு பரப்புவோா் மீது புகாா்

மதிமு பொதுச் செயலா் வைகோ குறித்து அவதூறு பேசி, சமூக வலைதளங்களில் வெளியிடும் பேச்சாளா்கள் நாஞ்சில் சம்பத், வல்லம் பசீா் ஆகியோா் மீது நடவடிக்கை கோரி அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. ... மேலும் பார்க்க

அரியலூரில் மருத்துவ முகாம் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து அலு... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித்தொகை பெற அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் பெற்றோரை இழந்து தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் உள்ள குழந்தைகளின் பள்ளிப் படிப்பு வரை... மேலும் பார்க்க

அரியலூா் அருகே தந்தை, மகனை குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தந்தை, மகனைக் கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. செந்துறையை அடுத்த சன்னாசிநல்லூா் தெற்குத்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம், தா.பழூா் பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. மாதாந்திரப் பராமரிப்பு பணியால் ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளை... மேலும் பார்க்க