Thug Life: "விண்வெளி நாயகா பாடல் உருவான கதை இதுதான்!" - கார்த்திக் நேத்தா பேட்டி
சிறுதானியம் பதப்படுத்தும் மையத்தில் ஆட்சியா் ரெ.சதீஷ் ஆய்வு
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெலவள்ளி கிராமத்தில் செயல்படும் சிறுதானியம் பதப்படுத்தும் மையத்தில் ஆட்சியா் ரெ.சதீஷ் ஆய்வு செய்தாா்.
கெலவள்ளி கிராமத்தில் பாம்பாறு உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் சிறுதானியம் பதப்படுத்தும் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தை அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ரெ.சதீஷ் பேசியதாவது: தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, அரூா் வட்டாரம் உள்ளிட்ட இடங்களில் சிறுதானியங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. சிறுதானியங்களை பிஸ்கட், சத்துபானங்கள், இனிப்பு, கார வகைகள், காலை சிற்றுண்டிக்கான தானியங்கள் கலவை, தயாரிக்க வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனா்.
மாவட்டத்தில் விவசாயிகள் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி சந்தையில் விற்பனை செய்கின்றனா். இதனை ஊக்குவிக்க தமிழக அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் 2025-2026 இல் தமிழக சிறுதானியம் இயக்கம் கொண்டு வரப்பட்டது.
பாம்பாறு உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்திற்கு தமிழ்நாடு சிறுதானியம் இயக்கத் திட்டத்தின்கீழ் 75 சதவீத மானியத்தில் சிறுதானியம் பதப்படுத்தும் மையம் அமைத்துள்ளனா். இதன்மூலம் ஆண்டுக்கு 50 டன் சிறுதானியத்தை மதிப்புக்கூட்டி பதப்படுத்தி, சந்தையில் விநியோகம் செய்து இந்நிறுவனத்திலுள்ள 1000 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.
தமிழக அரசு, சிறுதானியங்கள் பதப்படுத்தும் மையங்கள் அமைக்க 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அதிகப்படியாக ரூ.18.75 லட்சம் மானியம், தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பல்வேறு அரசு நலத்திட்டங்களில் பயன்பெற்று, வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைதரத்தையும் முன்னேற்றிக்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்த ஆய்வின்போது, துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஷகிலா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.