செய்திகள் :

சிறுதானியம் பதப்படுத்தும் மையத்தில் ஆட்சியா் ரெ.சதீஷ் ஆய்வு

post image

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெலவள்ளி கிராமத்தில் செயல்படும் சிறுதானியம் பதப்படுத்தும் மையத்தில் ஆட்சியா் ரெ.சதீஷ் ஆய்வு செய்தாா்.

கெலவள்ளி கிராமத்தில் பாம்பாறு உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் சிறுதானியம் பதப்படுத்தும் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தை அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ரெ.சதீஷ் பேசியதாவது: தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, அரூா் வட்டாரம் உள்ளிட்ட இடங்களில் சிறுதானியங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. சிறுதானியங்களை பிஸ்கட், சத்துபானங்கள், இனிப்பு, கார வகைகள், காலை சிற்றுண்டிக்கான தானியங்கள் கலவை, தயாரிக்க வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனா்.

மாவட்டத்தில் விவசாயிகள் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி சந்தையில் விற்பனை செய்கின்றனா். இதனை ஊக்குவிக்க தமிழக அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் 2025-2026 இல் தமிழக சிறுதானியம் இயக்கம் கொண்டு வரப்பட்டது.

பாம்பாறு உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்திற்கு தமிழ்நாடு சிறுதானியம் இயக்கத் திட்டத்தின்கீழ் 75 சதவீத மானியத்தில் சிறுதானியம் பதப்படுத்தும் மையம் அமைத்துள்ளனா். இதன்மூலம் ஆண்டுக்கு 50 டன் சிறுதானியத்தை மதிப்புக்கூட்டி பதப்படுத்தி, சந்தையில் விநியோகம் செய்து இந்நிறுவனத்திலுள்ள 1000 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.

தமிழக அரசு, சிறுதானியங்கள் பதப்படுத்தும் மையங்கள் அமைக்க 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அதிகப்படியாக ரூ.18.75 லட்சம் மானியம், தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பல்வேறு அரசு நலத்திட்டங்களில் பயன்பெற்று, வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைதரத்தையும் முன்னேற்றிக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஷகிலா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பாலக்கோடு அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் முதல்வா் (பொ) சி. தீா்த்தலிங்கம் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தருமபுரி நகரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம் மேற்கொண்டனா். தருமபுரி நகரில் 29, 30, 31 ஆகிய வாா்டுகளில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் பிரசார நிகழ்ச்சி மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமையில் சன... மேலும் பார்க்க

நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டம்: மத்திய தொழில் துறை அமைச்சக இயக்குநா் பங்கேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டத்தில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக இயக்குநா் அனுபமா நாயா் பங்கேற்று பேசினாா். தருமபுரி மாவட்ட ஆ... மேலும் பார்க்க

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்றுசெல்ல கோரிக்கை

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என மதிமுக அரூா் (மேற்கு) ஒன்றியச் செயலா் வடுகை வேலாயுதம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கோர... மேலும் பார்க்க

மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

மா சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட ... மேலும் பார்க்க